Showing posts with label service tax. Show all posts
Showing posts with label service tax. Show all posts

Friday, 5 August 2016

ஜிஎஸ்டி என்றால் என்ன?


நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

* மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

* மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.

* அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

* 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

* ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

* 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

* மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

* அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

Friday, 13 May 2016

அலைக்கற்றை ஒதுக்கீடு மீதான சேவை வரியால் தொலைதொடர்பு தொழில் பாதிக்கும்: அசோசம் கவலை

கோப்புப் படம்.


அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தின் மீதும் 15% சேவை வரிவிதிக்கப்படுவதான மத்திய அரசு திட்டத்தினால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பான அசோசம் கவலை தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு, இதனை பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது, அதனால் வரிவிதிப்புக்கு இதனை உட்படுத்த முடியாது, எனவே அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கு சேவை வரி விதிப்பது வளரும் நாடுகளுக்கு நல்லதல்ல. இது பெரிய எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அசோசம் கருதுகிறது.

அசோசேம் இது பற்றிய தங்கள் கவலைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதமாக எழுதியுள்ளது, “அலைக்கற்றைக்கு சேவை வரி விதிகப்பட்டால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும், இதனால் சாமானிய மக்களே சேவைவரியினால் அதிகம் பாதிக்கப்படுவர்.

ரூ.30,000 கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் மீது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வரிவிதிப்பது (முதல் ஆண்டே) இந்நிறுவனங்களை நிதிநெருக்கடிக்குக் கொண்டு தள்ளிவிடும்.

இது 2011-ம் ஆண்டின் தேசிய தொலைத்தொடர்புக் கொள்கைக்கு எதிரானது. அந்தக் கொள்கையின் படி அனைவருக்கும் தொலைத்தொடர்பு சேவை, குறைந்த கட்டணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போதைய சேவை வரி முடிவினால் நிச்சயம் சாதாரண மனிதன் முதல் தொலைத் தொடர்புத்துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அனைத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் மீதான சேவை வரி என்பதற்குப் பதிலாக தனியார் ஆபரேட்டர்களுக்கிடையே நடைபெறும் ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் சேவை வரி விதிக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் கட்டனத்தை அதிகரிப்பது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு டெலிகாம் நிறுவனங்களின் முதலீடு செய்யக்கூடிய பகுதிகளையும் பாதிக்கும், இதனால் புதிய தொழில்நுட்பங்கள், 4ஜி போன்ற நெட்வொர்க்குகளைக் கொண்டு வருவது சவால் நிரம்பியதாகி விடும்.

மேலும், இந்த சேவை வரிவிதிப்பினால் எதிர்கால ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சில நிறுவனங்கள் பங்கேற்க முடியாமல் போகக்கூட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே இந்திய தொலைத் தொடர்பு தொழிற்துறை கடன் பளுவினாலும், அதிக வரிகள், லாபம் குறைவான வர்த்தகம் மற்றும் அதிக அலைக்கற்றை விலைகள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கூடுதல் வரிகள் விதித்தால் நிறுவனங்கள் நேரடியாகக் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்படும் நாட்டு மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அசோசம் தனது கடிதத்தில் கவலை வெளியிட்டுள்ளது.