Tuesday 5 July 2016

National Small Industries Corporation Limited (NSIC)

Total No of Posts: 60

Name of the Posts:
1. Chief Manager: 05 Posts
2. Deputy Manager: 25 Posts
3. Assistant Manager: 30 Posts

Age Limit: Candidate upper age limit should be 42 years for S.No-01, 35 years for S.No-02 and 30 years for S.No-03 as on 11-07-2016. Age relaxation will be applicable 05 years for SC/ ST, 03 years for OBC categories

Educational Qualification: Candidate should possess Graduation in Mechanical, Civil, Electrical & Electronics, Electrical, Electronics & Communication Engineering from a recognized University or institution for S.No-01, Graduation with MBA/ PGDBM with specialization in Marketing from a recognized University for S.No-02 & 03.

Selection Process: Selection will be based on personal interview.

Application Fee: Candidates should have to pay of Rs. 400/- through Demand Draft in favor of “The National Small Industries Corporation Limited”, payable at New Delhi.

How to Apply: Eligible candidates can send their application in prescribed format along with necessary documents and demand draft by ordinary post/ registered post/ speed post/ courier/ hand to Deputy General Manager – Human Resources, The National Small Industries Corporation, “NSIC Bhawan”, Okhla Industrial Estate, New Delhi- 110020 on or before 11-07-2016 up to 06:00 PM.

Last Date For Receipt Of Application: 11-07-2016 up to 06:00 PM.

டிஜிட்டல் இந்தியாவில் யாருக்கு முதலிடம்?


டிஜிட்டல் இந்தியா என்கிற மிகப்பெரிய சவாலை இந்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. இதற்கேற்ப பல நிறுவனங்களும் இந்தியாவில் தங்களை விஸ்தரித்து வருகின்றனர். சர்வதேச அளவிலான மின்னணு தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் இந்தியா என்கிற மிகப்பெரிய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கெனவே இந்திய சந்தையில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களுக்குள் ஒரு போட்டியே நடந்து வருகிறது.

ஆம் இந்தியாவின் டிஜிட்டல் துறையில் நம்பர் 1 ஆக இருப்பது யார் என்பதில் கூகுளுக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர சமீப காலங்களில் இரண்டு நிறுவன தலைவர்களுமே இந்தியா வந்து சென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
தங்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஏற்ப அமெரிக்காவுக்கு வெளியே மிகப் பெரிய சந்தையை உருவாக்கும் முனைப்பில் இரண்டு நிறுவனங்களுமே ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் இந்தியாவில் அதிக அளவிலான பயனாளிகள், விளம்ப ரம், இணைய தொடர்பு வசதிகள் போன்றவை இந்த நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சந்தை என்பதில் சந்தேகமே இல்லை.

உலக அளவில் இணையதள பயனாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையதள பயன்பாடு ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது என் கிறது இன்டர்நெட் டிரண்ட்ஸ் என்கிற அறிக்கை. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில்தான் சீனா உள்ளது.

நவம்பர் 2015ல் காம்ஸ்கோர் வெளியிட்ட தர வரிசையில் இந்த துறையில் கூகுள்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இணையதள தேடு பொறி சந்தையில் அமெரிக்காவில் மட்டும் 63.9 சதவீதத்தை கூகுள் வைத்துள்ளது. 24.7 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். மே 2016 நிலவரப்படி 510 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்துள்ளது.

சமூக வலைதளமாக ஃபேஸ்புக் நிறுவனமும் சற்றும் சளைக்காமல் முன்னேறி வருகிறது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 340 பில்லியன் டாலர். அதே சமயத்தில் மார்ச் 2016 நிலவரப்படி தினசரி 100 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஃபேஸ்புக் தளத்தில் புழங்குகின்றனர் என்கிறது அறிக்கை. இந்தியாவில் மட்டும் தினசரி 7.3 லட்சம் பேர் இண்டர்நெர் மூலமும், 6.8 லட்சம் பேர் மொபைல் மூலம் தினசரி பயன்படுத்துகின்றனர். மாதாந்திர அளவில் சுமார் 1.4 கோடி பேர் புழங்குகின்றனர்.

ஆனால் இந்திய சந்தையில் ஏகபோகமாக உருவாவது அவ்வளவு சுலபமில்லை. சந்தையைக் கைப்பற்ற வேண்டுமானல் மொபைல் டேட்டா விலை குறைப்பு இருக்க வேண்டும் என்கிற ஒரு ஆய்வு.
ஃபேஸ்புக் இந்தியாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உமங் பேடி `சரியான நேரத்தில், சரியான செய்திகளோடு இந்திய பயனாளிகளுக்கு புதிய திட்டங்கள் வைத்துள்ளோம்.’ என்று குறிப்பிட் டுள்ளார். கூகுள் நிறுவனமும் மெகா பிளான்களை வைத்துள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் இண்டர்நெட் என்கிற முழுக்கத்தை வைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா என்கிற இந்த அரசின் திட்டங்களோடு இணைந்து செயல்பட திட்டமிட்டு வருகிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையும், ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜூகர்பெர்க்கும் பிரதமர் மோடியை சந்தித்த போது இந்தியா வில் தங்களது திட்டங்களை விவரித் திருக்கலாம். ஆனால் இவர்களில் டிஜிட்டல் இந்தியா சந்தையில் முன்னிலையில் இருக்கபோவது யார்?