Wednesday, 3 August 2016

Brihan Mumbai Electric Supply and Transport

Eligibility : BE/B.Tech
Location : Mumbai
Last Date 19 Aug 2016
Hiring Process : Written-test, Face to Face Interview
Probationary Engineers recruitment in Brihan Mumbai Municipal Corporation


Number of vacancies

Degree Holders in Mechanical/ Automobile/ Production or equivalent 

General  /12 Posts

Sportsman/01 Post

Degree Holders in Electronics/ Electronics & Telecommunication / Mechatronic

General /02 Posts

Qualification

(A) Probationary Engineer (Mechanical): A degree in Mechanical/Automobile/Production Engineering or equivalent of a Statutory University/Institution. Post Graduate qualification in Industrial Engineering and/or Automobile Engineering will be preferred.

(B) Probationary Engineer (Electronics): A degree in Electronics or Electronics and Telecommunications or Mechatronics or equivalent of a Statutory University/Institution.


(The candidates appearing for the final year examination can apply. However their candidature will be considered for the post subject to passing the Degree Examination.)

Knowledge of Marathi: Candidate should have passed SSC or equivalent or HSC Exam with 100/50 marks in Marathi subject (Higher level or Lower level) 

Total emoluments: Rs.14200

Age (As on – 19.08.2016) Not more than 25 years for candidates of Open Category and not more than 30 years for candidates belonging to Backward Class Communities and for sportsmen. 

Security Deposit : Rs.50,000 in cash. (a) Selected candidates should pay Security Deposit of Rs.50,000/-. Out of which Rs.35,000/- in cash before commencement of training; and the balance amount of Rs.15,000/- shall be deducted through his monthly salary in 6 equal monthly installments.

Administrative Charges: [i] Rs.300/- for candidates applying through Open Category. [ii] Rs.150/- for candidates applying through reserved category.

How to apply

Applications would be accepted only ONLINE from 26.07.2016 to 19.08.2016.



Candidates who are paying the administrative charges through Challan, are required to pay the same at SBI branch from 26.07.2016 to 20.08.2016 during working hours of the bank.

இளைஞர்களை ஈர்க்கும் வங்கிப் பணி

இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளுமே இப்போது பொருளாதார அதிர்வலைகளைச் சந்தித்து வருகின்றன. கிரீஸ் நாடு பெரும் கடனாளி ஆனதால் கடந்த ஆண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தொடங்கி இந்தியாவரைப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன. பிரிட்டன் மக்களுக்கு வேலைவாய்ப்பு, வருவாய் குறைந்ததன் விளைவாகச் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் சம்பவம் நிகழ்ந்தது. ஆக இன்றைய நிலையில் வளமான பொருளாதாரச் சூழலும் எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வேலையும் பலரின் கனவாக மட்டுமே நீடிக்கிறது. ’நிரந்த வேலை’ என்கிற சொல்லையே இன்றைய இளைஞர்களில் பலர் கேட்டிருக்க மாட்டார்கள். அதேபோல வேலை பளு, மன அழுத்தம் இல்லாத பணிச் சூழலும் அரிதாகிவருகிறது. இந்தப் பின்னணியில் வங்கிப் பணிகள் பெரிதும் கவனம் பெறுகின்றன.

இன்றைய தேதியில் இந்தியாவைப் பொறுத்தவரை ஐ.டி. துறையைக் காட்டிலும் மளமளவென வளர்ந்து வருவது வங்கித் துறையாகும். ஏனென்றால், பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை பல வங்கி கிளைகள் புதிதாகத் திறக்கப்பட்டுவருகின்றன. இதனால் இத்துறையில் வேலைவாய்ப்பும் வேகமாக அதிகரித்துவருகிறது. அதிலும் அரசு வங்கிகளில் வேலை என்பது மரியாதையும், நல்ல சம்பளமும், வேலை உத்தரவாதமும் நிறைந்தது. உங்களுடைய பணிவாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு உகந்தது வங்கி வேலையா என்பதை இப்போது கண்டுபிடிக்கலாம் வாங்க.

வேலை தகுதி
வங்கி பணியில் சேரப் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதற்காகக் குறிப்பிட்ட பாடப் பிரிவில்தான் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. கலை, அறிவியல், வணிகவியல் என எந்தப் பாடப் பிரிவைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். வயது வரம்பு 20-28 க்குள் இருக்க வேண்டியது மட்டும் கட்டாயம். அதே நேரத்தில் கணித ஆற்றல் மிக்கவர்களுக்கு இந்த வேலை ஏதுவாக இருக்கும். பகுப்பாய்வு, தர்க்கத் திறன், பொது அறிவு, அடிப்படை கணினி அறிவு, ஆங்கில மொழி அறிவு ஆகியவற்றைச் சோதிக்கும் ஆப்டிடியூட் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

ப்ரோபேஷனரி ஆபிசர் பதவிக்கான தேர்வில் மட்டும் கட்டுரை வடிவில் ஆங்கிலத்தில் விரிவான விடையளிக்கும் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்கா ணலும் குழுகலந்துரையாடலும் நடத்தப்படும். அடுத்து, பண முதலீடு, சேமிப்பு, கடன், வட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக வங்கியை அணுகும் பலவிதமான மக்களை அன்றாடம் சந்திக்கும் வேலை இது. ஆகவே, வாடிக்கையாளர்கள் சேவையில் சிறப்பாக விளங்கும் அணுகுமுறை அவசியம்.

வாய்ப்பும் போட்டியும்
வேலைவாய்ப்பு வங்கித் துறையில் அதிகரித்திருந்தாலும் நிச்சயமாகப் போட்டியும் கடுமையாகி இருக்கிறது என்பது நிதர்சனம். தனியார் வேலைகளில் ஏற்படும் அதிருப்தி பலரை அரசு வங்கிகளை நோக்கித் திருப்பியுள்ளது. இதனால் சில ஆயிரம் பணியிடங்களுக்குப் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இருந்தாலும் பலவிதமான வங்கித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐ.பி.பி.எஸ் நான்கு தேர்வுகள், எஸ்.பி.ஐ. இரண்டு தேர்வுகள் ஆர்.பி.ஐ. இரண்டு தேர்வுகள் - இப்படிப் பல தேர்வுகள் நடப்படுகின்றன. குமாஸ்தா (Clerk) வேலைக்கு மாதச் சம்பளம் ரூ.18,000 என்பதில் தொடங்கி அதிகாரி வேலைகளுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கப்படுகின்றது. இதுதவிரப் பல சலுகைகளும் உண்டு.

எப்படித் தயாராவது?
வங்கித் துறையில் சேர முடிவெடுத்தால் முதல் கட்டமாக அதில் பணியாற்றுபவர்களோடு கலந்துரையாடுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அறிவாற்றல் இருக்கும். வங்கி தேர்வுக்குத் தேவையான தர்க்க அறிவு, பொது அறிவு, மொழி அறிவு, கணித அறிவு எனப் பலவற்றைக் கூர்மைப்படுத்தச் சரியான பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுப்பது உகந்தது. தலைசிறந்த பயிற்சி மையத்தில் படித்தாலும் கற்றுக்கொண்டவற்றை மீண்டும் மீண்டும் சுயமாகப் பயிற்சி செய்வது இன்றியமையாதது.

சரியான பயிற்சி, எளிய வெற்றி!
“சமீபத்தில் வெளியான எஸ்.பி.ஐ. கிளர்க் தேர்வுக்கான முடிவில் எங்களுடைய ரேஸ் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்றவர்களில் 4733 தேர்வாகியிருப்பது பெருமையாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் நாங்கள் வெறுமனே தேர்வுக்கான பாடத்திட்டத்தை மட்டும் கற்பிப்பதில்லை. இங்குப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வங்கி வேலை சம்பந்தப்பட்ட 10,0000 புத்தகங்கள் கொண்ட சிறப்பான நூலகத்தில் எந்நேரமும் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது, 150 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன, கூடுதல் கவனம் செலுத்த 5 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாகக் கல்லூரி மாணவர்களும் ஐ.டி. துறை பணியாளர்கள் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பெண்கள் வங்கி வேலையில் சேர விரும்புகிறார்கள்.

எட்டாம் வகுப்பின் அடிப்படை கணிதத்தைச் சிறப்பாகப் பயின்றாலே எளிதில் இந்தத் தேர்வில் வெற்றி பெறலாம். அதுவும் தமிழகத்தைப் பொருத்தவரை 100-க்கு 21 மதிப்பெண் எடுத்தாலே பாஸ். தொடர்ந்து தேர்வுகளை எழுதிப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறலாம். அடுத்த ஆறு மாதங்களில் 10 வங்கித் தேர்வுகள் நடைபெற உள்ளன. அத்தனைக்கும் ஒரே பாடத்திட்டம்தான். 25,000 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்போதிலிருந்து முறையாகப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தால் யாராக இருந்தாலும் நான்கு அல்லது ஐந்தாவது தேர்வில் வங்கி வேலையை வென்றெடுக்கலாம்!”

Tuesday, 2 August 2016

Department of Agriculture & Cooperation Recruitment 2016

Total No of Posts: 03

Name of the Posts: Analyst
1. MNCFC, New Delhi: 02 Posts
2. RRSC, Bangalore: 01 Post

Educational Qualification: Candidates should possess M. Sc Agriculture/ M. Tech/ M. Sc (Tech) (Agronomy/ Crop Physiology/ Agro-meteorology/ Horticulture/ Statistics/ Agriculture Statistics/ Remote Sensing & GIS/ Geomatics/ Geoinformatics)/ M. Sc Environmental Science with at least 1 year experience in Remote Sensing & GIS.

Selection Process: Candidates will be selected based on written test & interview.

How to Apply: Eligible candidates can send their application in prescribed format by email addresses to mncfc.jobs@gmail.com & ncfc@gov.in on or before 10-08-2016.

Last Date for Submission of Application: 10-08-2016.

பி.எட்., படிப்புக்கு புதிய கட்டணம்!

சென்னை: பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதற்காகஅக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத இறுதியில்,பி.எட்.கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில்புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. 
நடப்பு கல்வி ஆண்டு முதல், 2018 - 19 வரைபி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்.ஆகிய படிப்புகளுக்கானபுதிய கல்விக் கட்டணம் அமலில் இருக்கும்.இதற்காக கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆவணங்களை,ஆகஸ்ட், 8ம் தேதிக்குள் அனுப்பசுயநிதி கல்லுாரி கல்விக் கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. 
ஆவணங்கள் வந்ததும்கல்லுாரிகளில் ஆய்வு செய்துபுதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்

Monday, 1 August 2016

பழைய வீடுகள் வாங்குவது லாபமா?

நகரங்கள் வேகவேகமாக வளர்ந்துவரும் சூழலில் நகரத்துக்குள் புதிய வீடோ அடுக்குமாடி வீடோ வாங்குவது பலருக்கும் பெருங்கனவுதான். நகரத்துக்குள் வீடும் வேண்டும்; விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் கொஞ்சம் அதிகம். அப்படி நினைப்பவர்களுக்குக் கட்டப்பட்ட பழைய வீடுகளை வாங்குவதே ஒரே வழி.
பழைய அடுக்குமாடி வீடு
சென்னை போன்ற பெருநகரங்களில் பழைய வீடு வாங்கலாம் என்றால், முதலில் நினைவுக்கு வருவது உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு, தனி வீடு வாங்க நிறைய பணம் செலவாகக்கூடும். எனவே, சில பல லட்சங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் அடுக்குமாடி வீடே நல்ல தேர்வு.
என்ன விலையில் கிடைக்கும்?
பழைய வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகளை வாங்கும்போது பல விஷயங்களையும் கவனிக்க வேண்டும். சென்னை பள்ளிக்கரணையில் பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கிய பாலமுருகனின். தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “கொஞ்சம் விலை குறைவாக வாங்க வேண்டும் என்பதற்காகப் பழைய அடுக்குமாடி வீடு வாங்கினேன். பழைய வீடு என்றாலும் மிகவும் பழைய வீட்டை வாங்கினால், அது நிறைய செலவு வைக்கவும் செய்யும். வீட்டின் வயது 15 ஆண்டுகளுக்குள் உட்பட்டதாக இருப்பது நல்லது. வீடு அமைந்திருக்கும் இடம், கட்டிடத்தின் வயது, கட்டிடத்தின் பராமரிப்பு, கட்டிடத்தின் வலிமை போன்ற விஷயங்களை வைத்து வீட்டின் விலையை முடிவு செய்ய வேண்டும். இதைப் பொறுத்து அந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படும் புதிய வீட்டின் விலையைவிட 25 முதல் 40 சதவீதம் குறைவாகக் கிடைக்கலாம்” என்று அவர் கூறினார்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
ஒரு வேளை 5 ஆண்டுகள் வயதான வீடு என்றால் 15 முதல் 20 சதவீதம் வரை விலை குறைவாகக் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. வீடு மறுவிற்பனை எனும்போது, வீட்டில் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் பலரும் வீட்டுக் கடன் எடுத்தே வீட்டை வாங்குகிறார்கள். பல ஆண்டுகள் தவணை செலுத்துகிறார்கள். எனவே அசல் பத்திரங்கள் வங்கியில் இருக்கும். எனவே அசல் பத்திரத்தை வாங்கிப் பார்க்க வேண்டும். அப்படியில்லையென்றால் அந்த வங்கியின் அனுமதி பெற்று, அவர்கள் சொல்லும் நிபந்தனையின்படி வீட்டை வாங்கலாம்.
மேலும் வீட்டின் தாய்ப் பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களையும் இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்லது வழக்கறிஞரிடம் காட்டி ஆராயவும். ஒரு வேளை வங்கிக் கடன் முழுமையாகச் செலுத்தப்பட்ட பிறகு ஆவணம் தொலைந்துவிட்டது, நகல் பத்திரம் இருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலை கொஞ்சம் குறைவாகக் கிடைத்தாலும், இதுபோன்ற வீட்டை வாங்காமல் இருப்பதே நல்லது. வீட்டை வாங்குவதற்கு முன்பு சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களுக்குப் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
தனி வீடு
இதுவே தனி வீடு என்றால் மனையின் சந்தை விலையோடு, கட்டிடத்தின் வயதைப் பொறுத்து வீட்டின் மதிப்பு இருக்கும். பழைய தனி வீடு என்றால், உண்மையான மதிப்பை அறிய சிவில் பொறியாளரைக் கொண்டு ஆராய்வது நல்லது. இதிலும் வீட்டின் மதிப்பை உறுதிசெய்தால், மேற்கூறிய எல்லா விஷயங்களும் தனி வீட்டுக்கும் பொருந்தும்.
வங்கிக் கடன்
பழைய வீட்டுக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும். பழைய வீடு வாங்க வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன் தருகின்றன. பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆயுளைப் பொறுத்து வங்கிக் கடன் கிடைக்கும். 15 முதல் 20 ஆண்டுகள் வயதுள்ள வீடாக இருந்தாலும் கடன் கிடைக்கும். மற்றபடி புதிய வீடு வாங்க வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கு உள்ள நிபந்தனைகளே பழைய வீடு வாங்கவும் பொருந்தும்.
வங்கிகளின் புள்ளிவிவரங்களின்படி வீட்டுக் கடன் வாங்குபவர்களில் சுமார் 15 முதல் 20 சதவீதம் பேர் பழைய வீடுகளை வாங்குவதாகக் கூறப்படுகிறது.