Wednesday, 6 July 2016

வியாழனின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது நாசாவின் 'ஜூனோ'!

படம்: நாசா

நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக வியாழன் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது.

இது, சூரிய குடும்பம், கிரகங்கள் உருவான விதம் உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

வியாழன் கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் 1.1 மில்லியன் செலவிட்டு ஜூனோ விண்கலத்தைத் தயாரித்தனர்.

இந்த விண்கலம் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் விண்வெளி மையத்தில் இருந்து 2011, ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 5 ஆண்டுகளாகப் பயணித்து 290 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்த இந்த விண்கலம் சமீபத்தில் வியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தில் வெற்றிகரமாக நுழைந்தது.

இதைத் தொடர்ந்து, வியாழன் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் ஜூனோ விண்கலம் இன்று வெற்றிகரமாக நுழைந்தது. இதை மகிழ்ச்சியுடன் நாசா விஞ்ஞானிகள் கொண்டாடினர்.

வியாழன் கிரகத்தின் வளையங்களிலுள்ள கதிரியக்கத் தன்மை குறித்து ஆராயவும், வியாழன் கிரகம் எப்படி உருவானது, ஒட்டுமொத்த சூரிய குடும்பமும் எப்படி இயங்குகிறது என்பது குறித்து ஜீனோ தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



Tuesday, 5 July 2016

National Small Industries Corporation Limited (NSIC)

Total No of Posts: 60

Name of the Posts:
1. Chief Manager: 05 Posts
2. Deputy Manager: 25 Posts
3. Assistant Manager: 30 Posts

Age Limit: Candidate upper age limit should be 42 years for S.No-01, 35 years for S.No-02 and 30 years for S.No-03 as on 11-07-2016. Age relaxation will be applicable 05 years for SC/ ST, 03 years for OBC categories

Educational Qualification: Candidate should possess Graduation in Mechanical, Civil, Electrical & Electronics, Electrical, Electronics & Communication Engineering from a recognized University or institution for S.No-01, Graduation with MBA/ PGDBM with specialization in Marketing from a recognized University for S.No-02 & 03.

Selection Process: Selection will be based on personal interview.

Application Fee: Candidates should have to pay of Rs. 400/- through Demand Draft in favor of “The National Small Industries Corporation Limited”, payable at New Delhi.

How to Apply: Eligible candidates can send their application in prescribed format along with necessary documents and demand draft by ordinary post/ registered post/ speed post/ courier/ hand to Deputy General Manager – Human Resources, The National Small Industries Corporation, “NSIC Bhawan”, Okhla Industrial Estate, New Delhi- 110020 on or before 11-07-2016 up to 06:00 PM.

Last Date For Receipt Of Application: 11-07-2016 up to 06:00 PM.

டிஜிட்டல் இந்தியாவில் யாருக்கு முதலிடம்?


டிஜிட்டல் இந்தியா என்கிற மிகப்பெரிய சவாலை இந்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. இதற்கேற்ப பல நிறுவனங்களும் இந்தியாவில் தங்களை விஸ்தரித்து வருகின்றனர். சர்வதேச அளவிலான மின்னணு தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் இந்தியா என்கிற மிகப்பெரிய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கெனவே இந்திய சந்தையில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களுக்குள் ஒரு போட்டியே நடந்து வருகிறது.

ஆம் இந்தியாவின் டிஜிட்டல் துறையில் நம்பர் 1 ஆக இருப்பது யார் என்பதில் கூகுளுக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர சமீப காலங்களில் இரண்டு நிறுவன தலைவர்களுமே இந்தியா வந்து சென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
தங்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஏற்ப அமெரிக்காவுக்கு வெளியே மிகப் பெரிய சந்தையை உருவாக்கும் முனைப்பில் இரண்டு நிறுவனங்களுமே ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் இந்தியாவில் அதிக அளவிலான பயனாளிகள், விளம்ப ரம், இணைய தொடர்பு வசதிகள் போன்றவை இந்த நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சந்தை என்பதில் சந்தேகமே இல்லை.

உலக அளவில் இணையதள பயனாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையதள பயன்பாடு ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது என் கிறது இன்டர்நெட் டிரண்ட்ஸ் என்கிற அறிக்கை. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில்தான் சீனா உள்ளது.

நவம்பர் 2015ல் காம்ஸ்கோர் வெளியிட்ட தர வரிசையில் இந்த துறையில் கூகுள்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இணையதள தேடு பொறி சந்தையில் அமெரிக்காவில் மட்டும் 63.9 சதவீதத்தை கூகுள் வைத்துள்ளது. 24.7 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். மே 2016 நிலவரப்படி 510 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்துள்ளது.

சமூக வலைதளமாக ஃபேஸ்புக் நிறுவனமும் சற்றும் சளைக்காமல் முன்னேறி வருகிறது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 340 பில்லியன் டாலர். அதே சமயத்தில் மார்ச் 2016 நிலவரப்படி தினசரி 100 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஃபேஸ்புக் தளத்தில் புழங்குகின்றனர் என்கிறது அறிக்கை. இந்தியாவில் மட்டும் தினசரி 7.3 லட்சம் பேர் இண்டர்நெர் மூலமும், 6.8 லட்சம் பேர் மொபைல் மூலம் தினசரி பயன்படுத்துகின்றனர். மாதாந்திர அளவில் சுமார் 1.4 கோடி பேர் புழங்குகின்றனர்.

ஆனால் இந்திய சந்தையில் ஏகபோகமாக உருவாவது அவ்வளவு சுலபமில்லை. சந்தையைக் கைப்பற்ற வேண்டுமானல் மொபைல் டேட்டா விலை குறைப்பு இருக்க வேண்டும் என்கிற ஒரு ஆய்வு.
ஃபேஸ்புக் இந்தியாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உமங் பேடி `சரியான நேரத்தில், சரியான செய்திகளோடு இந்திய பயனாளிகளுக்கு புதிய திட்டங்கள் வைத்துள்ளோம்.’ என்று குறிப்பிட் டுள்ளார். கூகுள் நிறுவனமும் மெகா பிளான்களை வைத்துள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் இண்டர்நெட் என்கிற முழுக்கத்தை வைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா என்கிற இந்த அரசின் திட்டங்களோடு இணைந்து செயல்பட திட்டமிட்டு வருகிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையும், ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜூகர்பெர்க்கும் பிரதமர் மோடியை சந்தித்த போது இந்தியா வில் தங்களது திட்டங்களை விவரித் திருக்கலாம். ஆனால் இவர்களில் டிஜிட்டல் இந்தியா சந்தையில் முன்னிலையில் இருக்கபோவது யார்?

Monday, 4 July 2016

Department of Economics Affairs

Eligibility : CS, CA, MA, MBA/PGDM
Location : Delhi
Last Date : 18 Jul 2016
Hiring Process : Written-test
Young Professionals
Qualification :  Masters degree in Economics/Finance or MBA or Finance or CA/Cost Account
No. of Pot : 02
Salary : Rs.40,000/-
Age : 30 yrs
Consultant Finance
Qualification : Masters degree in Economics/ Finance or MBA or Finance or Chartered Accountant/Cost Accountant with 03 years post qualification relevant professional academic/research experience preferably in intro-project.
No. of Post : 02
Salary : Rs.80,000/-
Age : 40 yrs

How to apply

The application in the prescribed format should reach Room No. 230, Dlo Economic Affairs, M/o Finance, North Block, Central Secretariat by post or email (rama.kumar@nic.in ) on or before 18.07.2016.

தண்டனைக்குட்பட மறுக்கும் பாலியல் குற்றங்கள்!

“தீவிரவாதிகளைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு எனது வீட்டுக்குள் ராணுவத்தினர் வந்தார்கள். என்னையும் என் எட்டு வயது மகளையும் பாலியல் வல்லுறவு செய்தார்கள். நான் ஊர் மக்களிடம் நியாயம் கேட்டேன். மக்கள் திரண்டுபோய் காவல் துறையை நெருக்கினார்கள்.

மூன்று நாட்கள் தயக்கத்துக்குப் பிறகு புகாரை ஏற்றுக்கொண்டது காவல் துறை. காவல் துறையை எல்லாம் மதிக்க முடியாது என்றார்கள் ராணுவத்தினர். இரண்டாண்டுகளாக நீதிமன்ற அடுக்குகளில் ஏறினோம். ஆனால் கடைசியில் ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்” என்று ஒரு ஆய்வு மாணவியிடம் குமுறியிருக்கிறார் அந்தக் காஷ்மீரத்துத் தாய்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அவை தண்டனைக்குட்படுத்தப்படாத நிலையும் பங்காளாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளில் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொகுப்பு நூல்களாக வெளியிட்டிருக்கிறது டெல்லியைச் சேர்ந்த ஜுபான் பதிப்பகம். அதற்கான வெளியீட்டு விழாவில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பகிர்ந்துகொண்ட அனுபவம்தான் இது.

சிறையா, பணிநீக்கமா?
சிங்கத்தின் குகைக்குள்ளிருந்து மீண்ட ஆடுகளைப்போல இருந்துள்ளது அந்தக் குடும்பம். ராணுவ நீதிமன்றம் போனதையும் அந்தப் பெண்கள் விவரித்திருக்கின்றனர். “எங்கே பார்த்தாலும் ராணுவம், ராணுவம், ராணுவம் மட்டும்தான். ஏழு நாள் அங்கே தங்கியிருந்தோம். 30 பேருக்கும் மேல் இருந்த ராணுவ அதிகாரிகளுக்கு முன்னாலே ராணுவ நீதிமன்றம் தினமும் விசாரித்தது.

நாங்க சொல்றதுதான் உண்மைன்னு ஏத்துக்கிட்டாங்க. என் கணவரிடம் ‘தப்பு செஞ்சவங்கள ஜெயிலுக்கு அனுப்பவா, டிஸ்மிஸ் செய்யவா?’ ன்னு கேட்டார் நீதிபதி. ‘டிஸ்மிஸ் செய்யுங்கள் ஐயா, அப்போதான் எங்கள மாதிரி வேற யாரும் பாதிக்கப்படாம இருப்பாங்க’ என்றார் அவர். அவங்கள டிஸ்மிஸ் செஞ்சுட்டாங்க” என்று சிங்கத்தை ஜெயித்த கதையை கண்கள் பளபளக்க சிலிர்ப்புடன் சொன்னார்களாம் அவர்கள்.

காஷ்மீரத்து மாணவி கஜாலா வழியாக அந்தத் தாயின் சிலிர்ப்பு அரங்கில் அமர்ந்திருந்தவர்களின் உடல்களுக்குள்ளே பாய்ந்தது. கஜாலா அதோடு விடவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தேடியிருக்கிறார். அவர்கள் மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர் என்பதை அவர் அறிந்தார். ஆனால் அதை இன்றுவரை அந்தக் குடும்பத்தினருக்கு அவர் தெரிவிக்கவில்லை.

குற்றமா, ஒழுங்கீனமா?
பணியில் ஒழுங்கீனம் என்ற அடிப்படையில்தான் ராணுவ நீதிமன்றம் பாலியல் குற்றங்களை விசாரிக்கிறது. அதை ஒரு குற்றமாகப் பார்க்கவில்லை என்று கஜாலா புரிந்துகொண்டார். அதனால்தான் ராணுவத்தினர் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களின் குற்றங்களை ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

காஷ்மீரத்துத் தாய் வெளியே வந்து போராடினார். ஆனால், தன்னைத்தானே தனக்குள்ளே புதைத்துக்கொள்பவர்கள்தானே அதிகம். அதனால் பாலியல் வன்முறை பற்றிய புள்ளிவிவரங்கள் உலக அளவில்கூடத் துல்லியமாக வெளிவருவது கடினம்.