Monday, 16 May 2016

கால்சியம் மாத்திரைகளும் மாரடைப்பு நோய் ஆபத்தும்: மருத்துவ ஆய்வில் எச்சரிக்கை


60 வயது கடந்த பெண்கள் குறிப்பாக மாதவிடாய் முடிந்த பெண்கள் அல்லது கருப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஒரு பெரும் பிரச்சினையாகும்.


இதற்காக இவர்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு எலும்பு முறிவு வாய்ப்புகளை குறைக்கின்றனர். ஆனால் கால்சியம் மாத்திரைகள் இவர்களிடத்தில் மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக நார்வீஜியன் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

65 வயது பெண்கள் தினப்படி கால்சியம் எடுத்துக் கொள்வதன் மூலம் இடுப்பெலும்பு முறிவு மற்றும் பிற எலும்பு முறிவுகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டாலும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. 

60 வயது கடந்த சுமார் 1 லட்சம் பெண்களை இதற்காக ஆய்வு செய்துள்ளனர். இதன் ஆய்வு முடிவுகளில் இருதய நோய், ஸ்ட்ரோக் வாய்ப்புகள் கால்சியத்தினால் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக எலும்பு முறிவு சாத்தியம் குறைவாக இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் எலும்பை வலுப்படுத்த கால்சியம், வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக் கொள்வது கூடுதல் ரிஸ்க் என்கிறார் இந்த ஆய்வின் தலைவர் கன்ஹில்டு ஹேகன். 

இதற்கு முந்தைய ஆய்வுகளும் கால்சியத்தின் இருதய நோய் காரணிகளை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

60 வயது கடந்த சுமார் 1 லட்சம் பெண்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி காரணமாக 10,000 பெண்களுக்கு இருதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பு தெரிவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எனவே எலும்பு முறிவுகளைத் தடுத்து தரமான வாழ்க்கையை உறுதி செய்யும் கால்சியம் வைட்டமின் டி ஆகியவற்றினால் நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு. 

ஆனால் உணவின் மூலம் உட்செல்லும் கால்சியத்தில் இந்த ரிஸ்க் இல்லை என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. 

முதலில் வைட்டமின் ஈ பற்றியும் இவ்வாறான ஆய்வுகள் தோன்றின, பிறகு பீட்டா கரோடினின் மாரடைப்பு வாய்ப்பு குறித்தும் எச்சரிக்கப்பட்டது. 

தற்போது கால்சியம், வைட்டமின் டி இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ரத்தக்குழாய்களில் கால்சியம் சேர்ந்து விடுகிறது. இதனால் ரத்தக்குழாய்கள் இறுக்கமடைகின்றன. இதனால் ரத்த அழுத்தம் கூடுகிறது. நெஞ்சு வலி, மற்றும் மாரடைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் கால்சியம் மாத்திரைகளினால் ரத்தக்குழாய்களில் அது இறுகிய பரு போன்ற ஒரு சிறு கட்டியாகவும் மாறுகிறது. இதனால் ரத்தக்குழாய் குறுகலாகிறது. இதனையடுத்து ரத்தம் செல்வது பெரும் பிரச்சினைக்குள்ளாகி மாரடைப்பு ஏற்படுகிறது. அதேவேளையில் இந்த பரு அளவிலான சிறு கட்டிகள் உடைந்தது என்றால் ஸ்ட்ரோக் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதே ஆய்வுகள் தெரிவிக்கும் முடிவாகும். 

பால், யோகர்ட், பச்சைக் காய்கறிகள் உள்ளிட்டவைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இயற்கை கால்சியம் சத்துகளாக எடுத்துக் கொண்டால் இருதய நலம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

Sunday, 15 May 2016

Department of Revenue

Vacancy Name : Patwari
Educational Qualification :  12TH
Total No of Vacancy : 1120 Post
Salary : NA
Job Location : Himachal Pradesh
Last Date to Apply for this job : 04/06/2016
  1. No. of Posts & Their Name –  Patwari – 1120 posts
  2. Educational Qualification – All Interested Candidates should have completed 12th or its equivalent qualification from a recognized Board/University.
  3. Age Limit – Candidates Applicant age should be between 18 to 45 Years. Age relaxations will be applicable as per the rules.
  4. Application Fee – For General Candidates Application Fee is – 200/- & For All Other Candidates (ST/SC/OBC) Application Fee is – 100/-
  5. Important Dates To Remember-Last Date for Receiving of Application Form Is: 4-06-2016 .
  6. Location – Himachal Pradesh
  7. Employment Type – Contractual
All Eligible job seekers Can Download application Form through official website http://himachal.nic.in. After Filling The application form, candidate must send hard copy of application along with relevant testimonials (Mentioned In Detailed Advertisement) to the following Address before or on 4-06-2016.

வாக்காளர் அட்டை, வாக்காளர் சீட்டு இல்லாதவர்கள் 10 மாற்று ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு கையில் இல்லாத நிலையில் 10 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்தல் நடத்தை விதிகளின் கீழ், வாக்காளர் அட்டை அளிக்காதவர்கள், வாக்களிக்க அனுமதி மறுக்கப்படலாம். தற்போது புகைப்பட வாக்காளர் சீட்டு, வீடு வீடாகச் சென்று வாக் காளர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் கள் இடம்பெற்று, வாக்களிப்பின் போது, வாக்காளர் அட்டை, வாக்காளர் சீட்டு அளிக்க இயலாதவர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் வகையில் 10 வகையான மாற்று ஆவணங்களைக் காட்டி வாக் களிக்கலாம்.
அதாவது பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத் துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அட்டை, தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 14 May 2016

Canara Bank

Eligibility : CA, CS, MBA/PGDM, BE/B.Tech, ICWA, MSc, MA
Location : Anywhere in India
Last Date : 07 Jun 2016
Hiring Process : Written-test
Senior Risk Officer (RP 2/2016)
Qualification : Masters degree in any discipline with preference to Mathematics & Statistics/CA/CFA/CS/ICWA/MBA/BE/B.Tech. Should have completed CAIIB ; Candidates who ahs completed Fellow in Risk Management (FRM) will be given preference.
Age : 55 yrs
Chief Investment Officer (RP 2/2016)
Qualification : Masters degree in any discipline CA/CFA (USA)/CS/ICWA/MBA/BE./B.Tech. Desirable to have completed CIIAB
Age : 55 yrs
Chief Technology Officer (RP2/2016)
Qualification : First class in 4 yrs BE degree in CS/IT/EC from recognized University/ Institute. Post Graduate in areas to the role and or higher qualification like MBA will be given preference.
Age : 50 yrs
Selection Procedure : Short-listing and Interview.

புகைப் பழக்கத்தின் தீமை தெரிய வேண்டாமா?

சிகரெட் அட்டைப் பெட்டி மீதான எச்சரிக்கைப் படத்தைப் பெரிதாகக் கண்ணில்படும்படி இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற அரசின் நிபந்தனைக்கு, எதிர்பார்த்ததுபோலவே எல்லா புகையிலை நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அரசின் இந்தப் புதிய விதியை எதிர்க்கும் வழக்கில் தீர்ப்பு வர சில வாரங்கள் பிடிக்கும். அதுவரையில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியபடி, புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய தீய விளைவுகளைச் சித்தரிக்கும் படங்களை அட்டையின் 85% இடத்தில் அச்சிட வேண்டும். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையெல்லாம் அறிவியல்பூர்வமாக முறியடிக்க முடியாத புகையிலை நிறுவனங்கள், அவற்றைப் பற்றிப் பேசாமல், இந்த முடிவால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று போலியாகக் கரிசனம் காட்டுகின்றன.

சிகரெட் விற்பனையைக் குறைப்பதில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முன்மாதிரியாக இருக்கின்றன. இன்ன பிராண்டு சிகரெட் என்பதைக்கூட அட்டையில் அச்சிட முடியாமல் ஆஸ்திரேலிய அரசு தடுத்துவிட்டது. பிரான்ஸ், பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளில் எதிர்காலத்தில் சிகரெட் பெட்டிகளில் பிராண்டு பேரோ, படமோ, சின்னமோ, சிகரெட்டைப் பிடிக்கத் தூண்டும் வாசகங்களோ இடம்பெறாது. மாறாக, சிகரெட் பிடிப்பதால் வாயில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்கள் எச்சரிக்கும் விதத்தில் வண்ணத்தில் அச்சிடப்படும். 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இப்படி எச்சரிக்கைப் படங்கள், வாசகங்களுடன் சிகரெட் அட்டைகளை அச்சிட ஐரோப்பிய நீதிமன்றம் ஆதரவு தெரிவித்திருக்கிறது. அதற்கும் முன்னதாக சிகரெட்டின் தரம், சுவை பற்றிய ‘லைட்’ மற்றும் ‘மைல்ட்’ என்ற வாசகங்களை நீக்குமாறு கட்டளையிட்டது.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் இளைஞர்களிடம் கல்லூரியில் படிக்கும் காலத்திலோ, வேலைக்குப் போகத் தொடங்கும் காலத்திலோ ஏற்படுகிறது. அதில் சுவை ஏற்பட்டவுடன், உடலுக்குத் தீங்கு என்று தெரிந்தும் கைவிட முடியாமல் தவிக்கிறார்கள். சிகரெட்டைப் பிடிக்க வைப்பதில் அது தொடர்பான விளம்பரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அத்துடன் திரைப்படங்களில் கதாநாயகன் அல்லது வில்லன் முக்கிய கட்டங்களில் சிகரெட்டை ஸ்டைலாகப் பிடிப்பதைப் பார்த்து தாங்களும் அப்படியே பாவனை செய்யப்போய், சிகரெட் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். சிகரெட் எரியும்போது கிளம்பும் புகையில் உள்ள நறுமணமும் புகைப் பழக்கத்துக்குப் பலரை ஈர்த்துவிடுகிறது. தங்களுடைய மன இறுக்கத்தை சிகரெட் பிடிப்பதன் மூலம் தளர்த்திக்கொள்வதாகப் பலர் தவறாக நினைக்கிறார்கள். மேலும் பலர், புத்துணர்ச்சிக்கு சிகரெட் உதவுகிறது என்று கற்பனை செய்துகொள்கிறார்கள். உண்மையில், சிகரெட் அப்படி எதையும் செய்துவிடுவதில்லை. சிகரெட்டால் செய்ய முடிவதெல்லாம் உடல் நலத்துக்குக் கெடுதல்தான். சிகரெட் நிறுவனங்களின் பெயர்கள், வாசகம் போன்றவை இல்லாமல் வெறும் வெள்ளை நிற அட்டைப்பெட்டியில், கறுப்பு நிற எச்சரிக்கை வாசகத்தை அச்சடித்து விற்கத் தொடங்கியவுடனேயே விற்பனை சரியத் தொடங்கியுள்ளது. புகையிலை சிகரெட்டுக்கு மாற்று என்று கூறி ‘ஈ-சிகரெட்’டை அறிமுகப்படுத்தினார்கள். அது புகையிலை சிகரெட்டை ஒரேயடியாக வெளியேற்றிவிடவில்லை என்றாலும், நாளடைவில் அவர்கள் மீண்டும் புகையிலை சிகரெட்டுக்குத் திரும்பவே உதவும் என்று உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் திரைப்படக் காட்சிகளில் சிகரெட் வரும்போதெல்லாம் எச்சரிக்கை வாசகங்கள் தவறாது இடம்பெறுகின்றன. அதே சமயம், பல சிகரெட் நிறுவனங்கள் - மது நிறுவனங்களும்கூடத்தான் - சிகரெட்டைப் பிடிக்கத் தூண்டும் விளம்பரங்களை சிகரெட்டைக் காட்டாமலேயே செய்கின்றன. இதற்குத் தடை விதிக்க வேண்டும். சில மது விளம்பரங்கள் மது பாட்டிலைக் காட்டாமல் சோடா பாட்டிலை மட்டும் காட்டி பூடகமாக விளம்பரப்படுத்துகின்றன. உச்ச நீதிமன்றத்தில் வெற்றி கிடைத்துவிட்டது என்று இந்திய அரசு இத்துடன் இந்தப் பிரச்சாரத்தை கைவிடக் கூடாது.
இப்போது சிகரெட் உற்பத்தியாளர்கள் உலக வர்த்தக நிறுவனத்தை நாடியிருக்கிறார்கள். தங்களுடைய தொழிலுக்கு மட்டுமல்ல, புகையிலைச் சாகுபடிக்கும் இது ஆபத்து என்று முறையிட்டுவருகிறார்கள். அந்த அமைப்பு அவ்வளவு விரைவில் உண்டு, இல்லை என்று முடிவை அறிவித்துவிடாது. இந்த இடைவெளி அதிகமாக இருப்பது ஒருவகையில் நல்லது. ஏனென்றால், தீவிர புகையாளர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டுவிடலாம். புகைபிடித்தலுக்கு எதிரான பிரச்சாரத்தை உலக நாடுகள் தளர்த்திவிடக் கூடாது. பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு உள்ள தடையைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய உள் வட்டத்துக்குள் உள்ளவர்களையும் காப்பாற்றியாக வேண்டிய அவசியம் சமூகத்துக்கு இருக்கிறது.