Tuesday, 5 July 2016

டிஜிட்டல் இந்தியாவில் யாருக்கு முதலிடம்?


டிஜிட்டல் இந்தியா என்கிற மிகப்பெரிய சவாலை இந்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. இதற்கேற்ப பல நிறுவனங்களும் இந்தியாவில் தங்களை விஸ்தரித்து வருகின்றனர். சர்வதேச அளவிலான மின்னணு தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் இந்தியா என்கிற மிகப்பெரிய சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கெனவே இந்திய சந்தையில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களுக்குள் ஒரு போட்டியே நடந்து வருகிறது.

ஆம் இந்தியாவின் டிஜிட்டல் துறையில் நம்பர் 1 ஆக இருப்பது யார் என்பதில் கூகுளுக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர சமீப காலங்களில் இரண்டு நிறுவன தலைவர்களுமே இந்தியா வந்து சென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
தங்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஏற்ப அமெரிக்காவுக்கு வெளியே மிகப் பெரிய சந்தையை உருவாக்கும் முனைப்பில் இரண்டு நிறுவனங்களுமே ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் இந்தியாவில் அதிக அளவிலான பயனாளிகள், விளம்ப ரம், இணைய தொடர்பு வசதிகள் போன்றவை இந்த நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சந்தை என்பதில் சந்தேகமே இல்லை.

உலக அளவில் இணையதள பயனாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையதள பயன்பாடு ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது என் கிறது இன்டர்நெட் டிரண்ட்ஸ் என்கிற அறிக்கை. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில்தான் சீனா உள்ளது.

நவம்பர் 2015ல் காம்ஸ்கோர் வெளியிட்ட தர வரிசையில் இந்த துறையில் கூகுள்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இணையதள தேடு பொறி சந்தையில் அமெரிக்காவில் மட்டும் 63.9 சதவீதத்தை கூகுள் வைத்துள்ளது. 24.7 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். மே 2016 நிலவரப்படி 510 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்துள்ளது.

சமூக வலைதளமாக ஃபேஸ்புக் நிறுவனமும் சற்றும் சளைக்காமல் முன்னேறி வருகிறது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 340 பில்லியன் டாலர். அதே சமயத்தில் மார்ச் 2016 நிலவரப்படி தினசரி 100 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஃபேஸ்புக் தளத்தில் புழங்குகின்றனர் என்கிறது அறிக்கை. இந்தியாவில் மட்டும் தினசரி 7.3 லட்சம் பேர் இண்டர்நெர் மூலமும், 6.8 லட்சம் பேர் மொபைல் மூலம் தினசரி பயன்படுத்துகின்றனர். மாதாந்திர அளவில் சுமார் 1.4 கோடி பேர் புழங்குகின்றனர்.

ஆனால் இந்திய சந்தையில் ஏகபோகமாக உருவாவது அவ்வளவு சுலபமில்லை. சந்தையைக் கைப்பற்ற வேண்டுமானல் மொபைல் டேட்டா விலை குறைப்பு இருக்க வேண்டும் என்கிற ஒரு ஆய்வு.
ஃபேஸ்புக் இந்தியாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உமங் பேடி `சரியான நேரத்தில், சரியான செய்திகளோடு இந்திய பயனாளிகளுக்கு புதிய திட்டங்கள் வைத்துள்ளோம்.’ என்று குறிப்பிட் டுள்ளார். கூகுள் நிறுவனமும் மெகா பிளான்களை வைத்துள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் இண்டர்நெட் என்கிற முழுக்கத்தை வைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா என்கிற இந்த அரசின் திட்டங்களோடு இணைந்து செயல்பட திட்டமிட்டு வருகிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையும், ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜூகர்பெர்க்கும் பிரதமர் மோடியை சந்தித்த போது இந்தியா வில் தங்களது திட்டங்களை விவரித் திருக்கலாம். ஆனால் இவர்களில் டிஜிட்டல் இந்தியா சந்தையில் முன்னிலையில் இருக்கபோவது யார்?

Monday, 4 July 2016

Department of Economics Affairs

Eligibility : CS, CA, MA, MBA/PGDM
Location : Delhi
Last Date : 18 Jul 2016
Hiring Process : Written-test
Young Professionals
Qualification :  Masters degree in Economics/Finance or MBA or Finance or CA/Cost Account
No. of Pot : 02
Salary : Rs.40,000/-
Age : 30 yrs
Consultant Finance
Qualification : Masters degree in Economics/ Finance or MBA or Finance or Chartered Accountant/Cost Accountant with 03 years post qualification relevant professional academic/research experience preferably in intro-project.
No. of Post : 02
Salary : Rs.80,000/-
Age : 40 yrs

How to apply

The application in the prescribed format should reach Room No. 230, Dlo Economic Affairs, M/o Finance, North Block, Central Secretariat by post or email (rama.kumar@nic.in ) on or before 18.07.2016.

தண்டனைக்குட்பட மறுக்கும் பாலியல் குற்றங்கள்!

“தீவிரவாதிகளைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு எனது வீட்டுக்குள் ராணுவத்தினர் வந்தார்கள். என்னையும் என் எட்டு வயது மகளையும் பாலியல் வல்லுறவு செய்தார்கள். நான் ஊர் மக்களிடம் நியாயம் கேட்டேன். மக்கள் திரண்டுபோய் காவல் துறையை நெருக்கினார்கள்.

மூன்று நாட்கள் தயக்கத்துக்குப் பிறகு புகாரை ஏற்றுக்கொண்டது காவல் துறை. காவல் துறையை எல்லாம் மதிக்க முடியாது என்றார்கள் ராணுவத்தினர். இரண்டாண்டுகளாக நீதிமன்ற அடுக்குகளில் ஏறினோம். ஆனால் கடைசியில் ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்” என்று ஒரு ஆய்வு மாணவியிடம் குமுறியிருக்கிறார் அந்தக் காஷ்மீரத்துத் தாய்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அவை தண்டனைக்குட்படுத்தப்படாத நிலையும் பங்காளாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளில் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொகுப்பு நூல்களாக வெளியிட்டிருக்கிறது டெல்லியைச் சேர்ந்த ஜுபான் பதிப்பகம். அதற்கான வெளியீட்டு விழாவில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பகிர்ந்துகொண்ட அனுபவம்தான் இது.

சிறையா, பணிநீக்கமா?
சிங்கத்தின் குகைக்குள்ளிருந்து மீண்ட ஆடுகளைப்போல இருந்துள்ளது அந்தக் குடும்பம். ராணுவ நீதிமன்றம் போனதையும் அந்தப் பெண்கள் விவரித்திருக்கின்றனர். “எங்கே பார்த்தாலும் ராணுவம், ராணுவம், ராணுவம் மட்டும்தான். ஏழு நாள் அங்கே தங்கியிருந்தோம். 30 பேருக்கும் மேல் இருந்த ராணுவ அதிகாரிகளுக்கு முன்னாலே ராணுவ நீதிமன்றம் தினமும் விசாரித்தது.

நாங்க சொல்றதுதான் உண்மைன்னு ஏத்துக்கிட்டாங்க. என் கணவரிடம் ‘தப்பு செஞ்சவங்கள ஜெயிலுக்கு அனுப்பவா, டிஸ்மிஸ் செய்யவா?’ ன்னு கேட்டார் நீதிபதி. ‘டிஸ்மிஸ் செய்யுங்கள் ஐயா, அப்போதான் எங்கள மாதிரி வேற யாரும் பாதிக்கப்படாம இருப்பாங்க’ என்றார் அவர். அவங்கள டிஸ்மிஸ் செஞ்சுட்டாங்க” என்று சிங்கத்தை ஜெயித்த கதையை கண்கள் பளபளக்க சிலிர்ப்புடன் சொன்னார்களாம் அவர்கள்.

காஷ்மீரத்து மாணவி கஜாலா வழியாக அந்தத் தாயின் சிலிர்ப்பு அரங்கில் அமர்ந்திருந்தவர்களின் உடல்களுக்குள்ளே பாய்ந்தது. கஜாலா அதோடு விடவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தேடியிருக்கிறார். அவர்கள் மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர் என்பதை அவர் அறிந்தார். ஆனால் அதை இன்றுவரை அந்தக் குடும்பத்தினருக்கு அவர் தெரிவிக்கவில்லை.

குற்றமா, ஒழுங்கீனமா?
பணியில் ஒழுங்கீனம் என்ற அடிப்படையில்தான் ராணுவ நீதிமன்றம் பாலியல் குற்றங்களை விசாரிக்கிறது. அதை ஒரு குற்றமாகப் பார்க்கவில்லை என்று கஜாலா புரிந்துகொண்டார். அதனால்தான் ராணுவத்தினர் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களின் குற்றங்களை ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

காஷ்மீரத்துத் தாய் வெளியே வந்து போராடினார். ஆனால், தன்னைத்தானே தனக்குள்ளே புதைத்துக்கொள்பவர்கள்தானே அதிகம். அதனால் பாலியல் வன்முறை பற்றிய புள்ளிவிவரங்கள் உலக அளவில்கூடத் துல்லியமாக வெளிவருவது கடினம்.

Sunday, 3 July 2016

Brahmos Aerospace

Name of the Posts: General Manager/Additional General Manager

Educational Qualification: Candidates should possess B.E/ B.Tech 1st class, M.E/ MBA desirable with min 15 to 20 years experience in the Missile/Aerospace Field.

How to Apply: Eligible candidates send their application in the prescribed format by affixing a photograph, attested copies of all relevant certificates/ testimonials should reach to The General Manager (HR), BrahMos Aerospace Private Ltd, 16, Cariappa Marg, Kirby Place, Delhi Cantt., New Delhi 110010 by speed post on or before 08-07-2016.

Last Date for Submission of Application: 08-07-2016.

அதிசய உணவுகள்

தாய்வான் தலைநகர் டைபியில் உள்ள ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தை

இந்த உலகத்தில் வாழ்கிற ஒவ்வோர் உயிருக்கும் உண்ணுவதும் இனவிருத்தி செய்வதுமே முக்கியத் தொழில். வயிறே பிரதானம் என்றும் நம் முன்னோர் சொல்லியுள்ளனர்.
‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்/ இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்/என்நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே/ உன்னோடு வாழ்தல் அரிது’
- இது வயிற்றுப் பசியின் கொடுமையைப் பற்றி ஒளவையார் சொன்னது. வயிற்றுப் பசிக்கு உணவு கிடைத்துவிட்டால் போதுமா? நாக்கு ருசிக்கு மனிதர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள்தானே!
ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். என் கணவரின் கிளினிக்கிற்கு, ஒரு நோயாளியைத் தூக் கிக்கொண்டு வந்தனர். உலகின் சோகம் அத்தனையையும் முகத்தில் தாங்கி, ஒளி மங்கிய கண்களுடன் அவர் பரிசோதனை மேஜையின் மீது படுத்திருந்தார். அவரை நன்றாக பரிசோதித்த என் கணவர் சொன்னார்: ‘‘உங்களுக்கு பயப்படும்படி ஒன்றுமில்லை. சில மாத்திரைகளை எழுதித் தருகிறேன். தினம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்’’.
அதை கேட்ட நோயாளி ‘‘டாக்டர், எனக்கு வாழவே பிடிக்கவில்லை. மூன்று மாதங்களாக உப்பில்லா உணவை சாப்பிடுகிறேன்’’ என்றார்.

‘‘அப்படியா, இந்த தெரு முனையில் ஒரு பிரபல உணவகம் உள்ளது. அங்கே சென்று அரை பிளேட் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஊருக்குப் புறப்படுங்கள்’’ என்று என் கணவர் சொல்லி முடித்த மறுவினாடி, அந்த நோயாளி, ஸ்பிரிங் பொம்மையைப் போல துள்ளிக் குதித்து எழுந்தார். முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின் விளக்குப் பிரகாசத்துடன் ‘‘என்னது! பிரியாணி சாப்பிடலாமா?’’ ஓங்கி குரல் எடுத்து கேட்டார்.

‘‘ஆமாம்’’ என்று என் கணவர் தலையாட்டி புன்ன கைக்க, நான்கு நபர்கள் தூக்கிக் கொண்டுவந்த அந்த நோயாளி துள்ளல் நடைப் போட்டு விடைபெற்றார்.
அப்போது ருசிக்காக நீளும் மனித நாவின் சக்தி எனக்குப் புரிந்தது. உலகின் பல நகரங்களுக்கும் நான் பயணித்திருக்கிறேன். அங்கே எல்லாம் பலவகையான உணவுகளை உண்டு மகிழ்ந்திருக்கிறேன். கண்டு மிரண் டும் இருந்திருக்கிறேன். அந்தந்த நாட்டில் உள்ளவர் களுக்கு அவரவர் உணவு வகைகள் பிடித்தமானதாக இருக்கும். முதலில் இதை நாம் புரிந்துகொண் டால் உலகெங்கிலும் கடை விரிக்கப்பட் டிருக்கும் உணவு வகைகளை ருசித்து மகிழலாம் அல்லது பார்த்து மகிழலாம்.

இப்படி பல உலக நாடுகளின் உணவகங் களில், இரவு உணவுச் சந்தைகளில், அங்கே வசிக்கும் மக்களின் வீடுகளில், நண்பர்களின் இல்லங் களில், இந்தியாவின் பல நகரங்களில் உண்டு மகிழ்ந்த உணவு வகைகளைப் பற்றியும், பல வேடிக்கையான அனு பவங்களை பற்றியும் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

தாய்வான்...
உலக வரைப்படத்தில் நம் கையில் உள்ள கட்டை விரல் அளவுக்கான சிறிய இடத்தை ஆக்கிரமித்திருக்கும் சிறு தீவு. கிழக்கு சீனாவில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள இங்கே, பாரம்பரியம் மிக்க நகரங்கள், கொதிக்கும் நீரூற்றுகள், அழகிய மலைத் தொடர்கள் என்று சிந்தையைக் கவரும் இடங்கள் பல இங்கே உண்டு. தாய்வானின் தலைநகரம் ‘டைபி’. இந்நகரத்தின் பொருளாதாரமே சுற்றுலாத் துறையைச் சார்ந்துதான் இருக்கிறது. 2013-ம் ஆண்டில் மட்டும் 6.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கே வலம் வந்துள்ளனர். இப்படி வருபவர்களை முக்கியமாக கவரும் இரண்டு அம்சங்களில் ஒன்று, ‘டைபி 101'. மற்றொன்று, இங்கே இருக்கும் இரவு மார்க்கெட்டுகளும், அங்கே விற்கப்படும் பலவிதமான உணவு வகைகளும்தான். 2004-ல் கட்டிமுடிக்கப்பட்ட ‘டைபி 101' என்ற இந்தக் கட்டிடம் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாக, துபாயில் உள்ள ‘புர்ஜ் கலிஃபா’ கட்டப்படும் வரை திகழ்ந்தது.

டைபியின் இரவு உணவுச் சந்தைகளைப் பற்றி கேள்விபட்டிருந்ததால், அங்கே போக வேண்டுமென்று விரும்பினேன். இந்த நகரத்தின் பல எழில்மிக்க, சரித்திர புகழ்மிக்க இடங்களைப் பார்த்துவிட்டு, நாங்கள் தங்கி யிருந்த ஹோட்டலுக்கு வந்துச் சேரும்போதே இரவு நேரம் மணி 7. உணவுச் சந்தைகள் நள்ளிரவையும் தாண்டி இயங்கும் என்பதால், உற்சாகத்துடன் கிளம்பினோம்.
‘‘சாந்தி... நாம் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே ஏதாவது ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு செல்லலாமா?’’ என்றார் என் கணவர்.

‘‘அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், வாங்க. இரவு உணவுச் சந்தையிலேயே சாப்பிடுவோம்’’ என்றேன்.

நான் கடல் உணவை விரும்பிச் சாப்பிடுவேன். தாய்வான் ஒரு தீவாக இருப்பதால் அங்கே ஏராளமான கடல் உணவுகள் கிடைக்கும். இதைத் தவிர தாய்வான், சைனாவின் ஒரு பகுதியாக கருதப்படுவதால் அல்லது சைனாவின் அருகே இருப்பதால் அங்கே சைனீஸ் உணவு வகைகளும் கிடைக்கும் என்று எண்ணினேன்.

எங்கள் ஹோட்டலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இருந்த ‘ஷிலின்’ இரவு உணவு மார்கெட்டுக்குள் நுழைந்தோம். தெருவின் இருபுறமும் வரிசையாக சின்னச் சின்ன ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும், போதாத குறைக்கு தள்ளுவண்டிகளில் செல்லப் பிராணிகளான நாய்களும் வலம் வந்து கொண்டிருந்தன.

என் மூக்கை பலவிதமான வாசனைகள் ஒரே சமயத்தில் படையெடுத்து வந்து தாக்கின. சோயா சாஸின் வாசனை, வறுக்கப்படும் மாமிச உணவுகளில் இருந்து எழும் புகை, தங்கள் உணவை வந்து ருசிக்கும்படி கூவி அழைக்கும் வியாபாரிகளின் கூக்குரல், கைகளில் தட்டை ஏந்தி தங்கள் முறைக்காகக் காத்து நிற்கும் வாடிக்கையாளர்களின் தரிசனம்… என்று அந்த இரவு உணவு மார்க்கெட் பல காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டியது.

அந்தக் கூட்டத்தில் புகுந்து நானும் என் கணவரும் முதலில் வலது பக்க உணவுக் கடைகளை நோட்டம்விட்ட படி நடந்தோம். ‘இங்கே (Frog Eggs Drink) தவளை முட்டைகளின் பானம் கிடைக்கும்’ என்ற அறிவிப்பு இருந்த இடத்தில் நின்று, பச்சை கலரில் இருந்த அந்த பானத்தை ஆச்சரியம் கொண்டு பார்த்தேன்.