Friday, 3 June 2016

பிளஸ் 2-வில் 1,129 மதிப்பெண் எடுத்தும் கல்லூரியில் சேர முடியாத தேயிலை தோட்ட தொழிலாளி மகள்

வி. சினேகா

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,129 மதிப்பெண்கள் எடுத்தும் உயர்கல்வியில் சேர வசதியின்றி மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகள் தவித்து வருகிறார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டு எஸ்டேட் நிர்வாக குடியிருப்பில் வசித்துவரும் தனுஸ்ராணி மகள் வி. சினேகா (17). இவர் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான காந்திஜி வித்யாபீடம் மேல்நிலைப் பள்ளியில் படித்து பிளஸ் 2-வில் 1,129 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். பாடவாரியாக இவர் எடுத்த
மதிப்பெண்கள் : தமிழ்- 179, ஆங்கிலம்- 166, வரலாறு- 196, பொருளாதாரம்- 194, வணிகவியல்- 194, கணக்குப் பதிவியல்- 200.

நல்ல மதிப்பெண்கள் எடுத்தி ருந்தும் வசதியில்லாததால் கல்லூ ரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மாணவி வி. சினேகா கூறியதாவது: எங்களது பூர்வீகம் நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில். ஆனால், பிழைப்புக்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பே, மூணாறில் குடியேறி விட்டோம். நான் எனது பெற்றோருக்கு ஒரே மகள். எனது தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே எங்களை நிராதரவாக விட்டுவிட்டு சென்று விட்டார். எனது தாயாரும், பாட்டியும் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து, என்னை 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால், காந்திஜி வித்யாபீடம் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 1, பிளஸ் 2 படித்தேன். எனது ஏழ்மை நிலையை அறிந்த பள்ளி நிர்வாகம் விடுதிச் செலவை ஏற்றது. கடந்த ஆண்டு, எனது பாட்டி இறந்து விட்டார். எனது அம்மாவுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது. இதனால், நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க பண வசதியில்லை. யாரேனும் உதவி செய்தால் மேல்படிப்பு படிக்க முடியும். இல்லாவிட்டால், எனது தாயாருடன் சேர்ந்து கூலி வேலைக்குச் செல்ல வேண்டியதுதான் என விரக்தியுடன் தெரிவித்தார்.

Thursday, 2 June 2016

Central Institute of Plastics Engineering & Technology (CIPET)

Name of the Post: Consultant

How to Apply: Eligible candidates may send their resume to Director (Administration), CIPET Head Office, T.V.K Industrial Estate, Guindy, Chennai – 600 032 on or before 10-06-2016.

Last Date for Submission of Application: 10-06-2016.


புதுச்சேரியில் சமூக விரோத செயல், ஊழல் புகார்களுக்கு 1031-ல் அழைக்கலாம்: கிரண்பேடி புதிய நடைமுறை

புதுச்சேரியில் சமூக விரோத செயல்கள், ஊழல், முறைகேடுகள்குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 1031 என்ற இலவச தொலைபேசி எண் ஒருவாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற கிரண்பேடி, மாநிலத்தில் குற்றங்கள் தடுப்பு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டங்களை தயாரிக்கும்படி ஐஜி பிரவீர் ரஞ்சனுக்கு உத்தரவிட்டார். இதன்படி காவல்துறை ஐஜி தலைமையிலான குழு வரைவு திட்டங்களை தயாரித்து வழங்கியுள்ளது. அதன் வெளியீட்டு விழா மற்றும் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம் நேற்று இரவு கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா வரவேற்றார். வரைவுத் திட்டங்கள் தொடர்பாக ஐஜி பிரவீர் ரஞ்சன் நோக்கவுரை ஆற்றினார். வரைவுத் திட்டங்களை வெளியிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசியதாவது:
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்த பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆங்கிலத்தில் பேச, அதனை டிஐஜி கண்ணன் ஜெகதீசன் தமிழில் மொழிபெயர்க்கிறார்.
‘‘புதுச்சேரி மிகவும் அழகான அமைதியான மாநிலமாகும். இச்சிறிய யூனியன் பிரதேசத்தில் குற்றங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்கவில்லை என்றால் காவல்துறை தங்கள் பணிகளை செய்யவில்லை என்பது தான் பொருளாகும்.

குற்றங்களை தடுப்பதில் காவல்துறை மட்டும் தனித்து செயல்பட இயலாது. பொதுமக்கள் பங்களிப்பும் அவசியமாகும். இரு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் குற்றமில்லா நகராக புதுவையை உருவாக்க முடியும்.

புதுச்சேரியில் நடைபெறும் சமூகவிரோத செயல்கள், ஊழல், முறைகேடு, ரௌடிகள் குறித்த விவரங்கள் தொடர்பான புகார்களை பொது மக்கள் தெரிவிக்க காவல்துறை சார்பில் 1031 என்ற இலவச தொலைபேசி எண் இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும். அதாவது வரும் புதன்கிழமை முதல் இந்த தொலைபேசி எண் செயல்படும். புதுச்சேரியில் குற்றங்களை ,ஊழல், குறித்த தகவல்களை 1031 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

புகார்கள் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். துணை நிலை ஆளுநர், தலைமை செயலர், காவல்துறை தலைவர் என மூவருக்கும் மட்டும் தெரியும். தகவல் தெரிவிப்போர் விரும்பினால் மட்டுமே அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். மேலும் தகவல் உண்மையாக இருந்தால் உரிய வெகுமதியும் தரப்படும்.

Wednesday, 1 June 2016

Karpagam University

Job TitleProfessor/Associate Professor/Assistant Professor

Departments:
  • Commerce
  • Pharmacy
  • Mathematics
  • English
  • Mechanical Engineering 
  • Automobile Engineering
  • Aeronautical Engineering
Qualification: M.E/M.Tech/M.A/M.Com/MPharm/M.Sc/M.Phil/NET/SLET/Ph.D

Job Location: Coimbatore

Salary : Salary will not be constraint

Last Date: 
As soon as possible

Apply Mode: Online

குழந்தையை காப்பாற்ற கொரில்லாவைக் கொன்ற ஓஹியோ உயிரியல் பூங்கா

ஓஹியோ உயிரியல் பூங்கா


''கடினமான முடிவுதான் என்றாலும், குழந்தையைக் காப்பாற்றி சரியான முடிவையே எடுத்திருக்கிறோம்''.
உயிரியல் பூங்காவில் கொரில்லா அகழிக்குள் தவறி விழுந்த, மூன்று வயது சிறுவனைப் பிடித்து இழுத்த 17 வயது கொரில்லாவைக் கொன்றிருக்கிறது அமெரிக்காவின் ஓஹியோ மாகாண உயிரியல் பூங்காவின் அவசர கால சிறப்புக் குழு.
இதுகுறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள், "எங்கள் உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்த மூன்று வயது சிறுவன் சுமார் 10 முதல் 20 அடி வரை இருந்த கொரில்லா அகழியில் தவறி விழுந்துவிட்டான். அங்கிருந்த கொரில்லா, சிறுவனை சுமார் 10 நிமிடங்கள் பிடித்து இழுத்தது. சிறுவனின் பெற்றோரும், அங்கிருந்தவர்களும் பயந்து அலற, விரைந்து வந்த எங்கள் அதிகாரிகள் வேறு வழியின்றி கொரில்லாவைக் கொன்றனர்.
கொரில்லாவின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவன், பின்னர் சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
ஹராம்பே என்ற பெயர் கொண்ட 400 பவுண்டுக்கும் மேல் எடையுள்ள கொரில்லா அது. அந்த சிறுவன் உயிருக்கே ஆபத்தான நிலையில் இருந்ததால் இந்த சோகமான முடிவை எடுக்க வேண்டி இருந்தது. கடினமான முடிவுதான் என்றாலும், குழந்தையைக் காப்பாற்றி சரியான முடிவையே எடுத்திருக்கிறோம்.
சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து இன்னும் பேசவில்லை. உயிரியல் பூங்காவில் ஒரு விலங்கைக் கொல்வது இதுவே முதல்முறை. இது எங்கள் மையத்துக்கே மிகவும் சோகமான நாள்" என்றனர்.
கொல்லப்பட்ட கொரில்லா அழிந்து வரும் உயிரினங்கள் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.