Sunday, 31 July 2016

Indian Statistical Institute (ISI) Bangalore

Eligibility : ME/M.Tech, BE/B.Tech
Location : Bangalore
Last Date : 16 Aug 2016
Hiring Process : Written-test
Project Title : "Quantitative Characterization of Complex Topologically Prominent Components of Porous Media derived from Rocks of Petrologic Significance via Mathematical Morphology and Fractal Geometry"
Qualification : M.Tech / B.Tech (Computer Science, Electronics Engg., Electrical Engg.) M.Math/M.Stat from a reputed institute with consistently good academic record. Valid GATE/NET score.
No. of Post : 01
Pay : Rs.25,000/-

How to apply


Typed applications stating (1) Name [In block letters); (2) Father's /Husband's name; (3) Address; (4) E-mail; (5) Phone No.; (6) Date of Birth; (7) Educational Qualification; (8) Work experience, if any, accompanied by attested copies of relevant documents/ testimonials addressed to the Director, Indian Statistical Institute, should reach Prof. B. S. Daya Sagar, Principal Investigator, Systems Science and Informatics Unit (SSIU), Indian Statistical Institute, 8th Mile, Mysore Road, RV College Post, Bangalore 560059 (or via e-mail: 
bsdsagar@isibang.ac.in
) on or before 16th August 2016.


உயிருக்கு எமனாகும் போலி உதிரி பாகங்கள்

காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென மோட்டார் சைக்கிளை யாரோ இழுப்பது போன்றிருக்கும். அதை உணர்ந்து சுதாரிக்கும் முன்பாகவே நம்மைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சார், டயர் பஞ்சர் என கூறிக் கொண்டே நம்மைக் கடந்து செல்வர். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலுள்ள பஞ்சர் கடையைத் தேடி அல்லது மொபைல் போனில் அவரை அழைத்து பஞ்சர் போட கழற்றினால், அவரோ சார், டியூப் மவுத் போயிடுச்சு, வேற டியூப் போடணும் என்பார். சரி வாங்கி வா என்றால், அருகில் கடை இல்லை, இதுபோன்ற தேவைக்கு தானே டியூபை வாங்கி வைத்திருப்பதாகக் கூறுவார். வேறு வழியின்றி அதை மாட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு பிற்பகலில் செல்வோம்.


அடுத்த 10 அல்லது 15 நாளில் இந்த சம்பவம் முற்றிலும் மறந்தே போயிருக்கும். அலுவலகத்தில் நிறுத்தியிருக்கும்போது காற்று இறங்கியிருக்கும். தெரிந்த மெக்கானிக் வந்து மீண்டும் டயரைக் கழற்றுவார். அவர் கூறும் தகவல் நம்மை விதிர்த்துப் போகச் செய்யும். சார் இது டுபாக்கூர் டியூப். இது ஒரு வாரம் கூட தாங்காது. இதன் விலை வெறும் ரூ. 60 என்பார். வேறு வழியின்றி அங்கீகாரம் பெற்ற டீலரிடமிருந்து பில்லுடன் டியூப் வாங்கி போடுவார்.

இது ஒரு சம்பவம்தான். இதுபோல உதிரி பாகங்களை சாலையோரக் கடைகளில் மாற்றி தவித்தவர்கள் ஏராளம்.

தினசரி நிகழும் சாலை விபத்துகளுக்கு என்ன காரணம் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அதிக வேகத்தில் சென்றது, அல்லது குடி போதையில் வாகனங்களை ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்ததாக பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் 20 சதவீத விபத்துகளுக்குக் காரணம், போலியான உதிரி பாகங்கள்தான். இது வெறுமனே யாரோ பதிவு செய்த புள்ளி விவரம் அல்ல. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) நடத்திய ஆய்வில்தான் இது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் 6 தயாரிப்புகளில் 2 தயாரிப்புகள் போலியானவை என்று பாகிஸ்தான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

போலிகள்
போலிகளின் புழக்கம் இன்று, நேற்று தோன்றியதல்ல, 1872-ம் ஆண்டிலேயே என்ஜினுக்கு உயவு எண்ணெய்யாக தயாரிக்கப்பட்ட மெக்கோய் உயவு எண்ணெய்க்கு போலிகள் வந்து அந்நிறுவன வருமானத்தையே அழித்துவிட்டன.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இதற்கு இணையாக போலித் தயாரிப்புகளும் வளர்ச்சி கண்டு வருகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் போலிகளின் வரவால் ஏற்பட்ட பாதிப்பு சரியாக உணரப்பட்டது 1980-களில்தான். சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டும்தான் போலிகள் வருவதில்லை. மற்றபடி பெரும்பாலான தயாரிப்புகளுக்கு போலிகள் சந்தையில் சர்வசாதாரணமாக புழங்குகின்றன.

உண்மையான உதிரி பாகங்களைப் போலவே இவை தயாரிக்கப்படும். அதேபோல அவை எப்படி பேக் செய்யப்பட்டிருக்கிறதோ அதைப் போல இவை பேக் செய்யப்பட்டிருக்கும். இவை தரத்தில் குறைந்தவை. நுகர்வோரைக் குழப்பும் விதமாக இத்தயாரிப்புகள் புழக்கத்தில் இருக்கும்.

வாகனங்களில் அடிக்கடி மாற்றும் ஸ்பார்க் பிளக், பிரேக் வயர், ஆயில் ஃபில்டர், ஏர் ஃபில்டர், முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், வைபர்ஸ், ஸ்டார்ட்டர் மோட்டார், பேரிங், ஆயில் பம்ப், பிரேக் பேட், பிஸ்டர் ரிங்ஸ், உயவு எண்ணெய் (லூப்ரிகன்ட்) டியூப் போன்றவை போலியாக அதிகம் தயாரிக்கப்படுகின்றன. போலிகள் ரூ. 12 ஆயிரம் கோடி முதல் ரூ. 14 ஆயிரம் கோடி வரை விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு சக்கர வாகனங்களுக்கான போலி தயாரிப்புகளின் மதிப்பு பாதிக்கும் மேல் உள்ளது. அதாவது ரூ. 5 ஆயிரம் கோடி முதல் ரூ. 7 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக விலை குறைந்த தயாரிப்புகள் பெரும்பாலும் இதுபோன்ற போலியான தயாரிப்புகளாகத்தான் இருக்கும்.

கடையின் விற்பனையாளர் விலை குறைந்த தயாரிப்பை அளிக்கிறார் என்றாலே அதில் வில்லங்கம் இருக்கிறது என்று உணர வேண்டும்.
கார் அல்லது மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் இதுபோன்ற தரம் குறைந்த போலியான உதிரி பாகங்களைப் பயன்படுத்துவது உங்களது பயணத்தை பாதிப்பதோடு விபத்துகளுக்கும் வழிவகுத்துவிடும்.

பாதிப்பு
போலியான பொருள்களை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது நிச்சயம். அடுத்து புதிய பொருள் தயாரிப்பு, கண்டுபிடிப்புகளை இது பாதிக்கும். ஒரு பொருள் கண்டுபிடித்து அதன் பலனாகக் கிடைக்கும் வருமானம் நிறுவனத்துக்குக் கிடைக்காமல் போகும்.
அரசுக்கு வரி வருவாய் குறையும். ஏனெனில் பெரும்பாலும் இதுபோன்ற போலி பொருள்கள் கள்ளக் கடத்தல் மூலமாகவோ அல்லது போலியான ஆவணங்கள் மூலமாக சந்தையில் விற்பனைக்கு வருபவை. சுமார் 35 சதவீத போலி தயாரிப்புகளால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2,200 கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, 30 July 2016

Government of India Press Recruitment 2016

Total No. of Posts: 22

Name of the Posts:
1. Book Binder: 17 Posts
2. Offset Machine Minder: 03 Posts
3. Plate Maker: 01 Post
4. Retoucher Litho Graphic: 01 Post

Age Limit: Candidates age should not be less than 14 years as on 07-05-2016.

Educational Qualification: Candidates should pass 8th Class examination under 10+2 system of education for post 1, passed in Matriculation or its equivalent or 10th class under 10+2 System with Physics and Chemistry as subjects for S.No-2 to 4 Posts with adequate experience.

How to Apply: Eligible candidates can send their applications in neatly typed along with self attested copies of Certificates in support of Age and educational qualifications to the General Manager, Govt of India, Minto Road, New Delhi within 21 days from the date of advertisement.

Important Dates:
Date of Advertisement: 11-07-2016
Last Date for Submission of Application: Within 21 days from the date of advertisement


பெண்களுக்கு முன்னுரிமை தரும் டாடா மோட்டார்ஸ்

பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்களில் குறிப்பாக இயந்திரங்கள் அசெம்பிளி பகுதியில் (ஷாப் ஃபுளோர்) பெண்கள் அதிகம் பணிபுரிவதில்லை. மூன்று ஷிப்டுகள் இயங்கும், அதிக எடையுள்ள கன ரக இயந்திரங்கள், உதிரி பாகங்களைக் கையாள வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடு காரணமாக பெண்கள் இப்பகுதியில் அதிகம் பணியமர்த்தப்படுவதில்லை.

ஆனால் இப்போது இந்த நிலையை படிப்படியாக மாற்ற உள்ளது டாடா மோட்டார்ஸ்.

பெரும்பாலும் ஐடிஐ முடித்தவர்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக தங்களது பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த பெண்களை இப்பணிகளில் நியமிக்க முடிவு செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

கார் தயாரிப்பு நிறுவனங்களில் மொத்தமாக ஷாப் ஃபுளோரில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 5 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது.

டாடா மோட்டார்ஸில் மொத்தம் 60 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் ஷாப் ஃபுளோரில் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவீதம் மட்டுமே. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 20 சதவீதமாக உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

பொதுவாக அசெம்பிளி பிரிவில் அதிக எடையுள்ள பொருள்களைக் கையாள வேண்டியிருக்கும் என்ற அபிப்ராயம் நிலவுகிறது. பெண்கள் அதிக எண்ணிக்கை யில் தொழில்நுட்ப படிப்பில் சேராததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இப்போது பெரும்பாலும் தானியங்கி முறைகள்தான் உள்ளன. ரோபோக்களின் புழக்கமும் வந்துவிட்டது. இதனால் அதிக எடைகளைக் கையாளவேண்டியிருக்கும் என்பது தேவையற்றதாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டே பெண்களை அதிகம் இத்தகைய பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸின் மனிதவள பிரிவின் தலைவர் கஜேந்திர சந்தேல் தெரிவித்தார்.

ஆள் தேர்வு
பொதுவாக இதுபோன்ற பணிகளுக்கு தேர்வு செய்வதற்கு ஐடிஐ முடித்த மாணவர்களைத் தேர்வு செய்வது வழக்கம். ஆனால் அதிலும் புதிய நடைமுறையை டாடா மோட்டார்ஸ் கடைப்பிடிக்க உள்ளது. அதாவது கிராமப்பகுதிகளில் எஸ்எஸ்எல்சி (10-வது) மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள கிராமங்களிலிருந்து மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு ்பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக சந்தேல் தெரிவித்தார். இதற்காக ஆட்டோமோடிவ் திறன் மேம்பாட்டுக் கவுன்சிலுடன் (ஏஐஎஸ்டிசி) டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் பெண்கள் தொழிற்சாலைகளில் இரவுப் பணிகளில் பணிபுரிய வசதியாக மாநில அரசுகள் நிறுவன சட்டங்களை திருத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுவும் தங்கள் ஆலைகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்துவதற்கு வழி வகுக்கும் என்று சந்தேல் தெரிவித்தார்.
இப்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின்படி பெண்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையான பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

டாடா மோட்டார்ஸில் முதல் ஷிப்ட் காலை 5.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும். பொது ஷிப்ட் காலை 9மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரையிலும், மூன்றாவது ஷிப்ட் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 மணி வரையிலும் நீடிக்கும்.

மாநில அரசுகள் தங்கள் தொழிலாளர் சட்டங்களை திருத்தும்பட்சத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் இதுபோல தங்கள் ஆலைகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, 29 July 2016

Northeast Frontier Railway

Total No.of Posts: 16

Name of the Posts: Sports Person
1. Athletics (Men & Women): 02 Posts
2. Badminton (Men): 01 Post
3. Basketball (Men & Women): 04 Pots
4. Cricket (Men & Women): 03 Posts
5. Cycling (Women): 01 Post
6. Football (Men): 03 Posts
7. Volleyball (Men): 02 Posts

Age Limit: Candidates age should be between 18-25 years as on 01-01-2017.

Educational Qualification: Candidates should possess Matriculation/ 10th or its equivalent.

Selection Process: Candidates will be selected based on Trail of Sports Performance, interview & assessment of sports achievement.

Application Fee: Candidates should pay Rs. 250/- for SC/ ST/ Ex.Servicemen/ PWD, women,Minorities & Economic Backward classes only with a provision for refunding the same to those who actually appear in the written examination & Rs. 500/- for all other categories (non-refundable) by IPO should be drawn in favour on FA & CAO/ NF Railway, and payable at Maligaon Post Office, Guwahati-781011.

How to Apply: Eligible candidates send their application on a good quality A-4 size palin paper in the prescribed format along with two recent passport size photographs duly attested by a gazetted officer, copies of all relevant certificates, experience & envelope should be superscribed with “Recruitment against Sports Quota:: Event_____” with the name of the event should be sent by ordinary post to Asstt. Personnel Officer (Recruitment), Northeast Frontier Railway HQ, Maligaon, Guwahati-781011 (Assam) or dropped in the Application Box in the recruitment Section in the office of Chief Personnel Officer, NF Railway HQ, Maligaon, Guwahati (Assam) on or before 23-08-201 & for remote areas on or before 02-09-2016.

Important Dates:
Last Date for Submission of Application: 23-08-2016.
Last Date for Submission of Application for Remote Areas: 02-09-2016