Tuesday, 14 June 2016

தூய நீரை தேடி முற்றுகையிடும் யானைகள்: ஆறுகள் மாசடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் தண்ணீருக்காக முகாமிட்டுள்ள யானைகள்.

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் தண்ணீருக்காக முகாமிட்டுள்ள யானைகள்.

தூய்மையான தண்ணீர் தேடி குன்னூர் அருகே உள்ள ரன்னி மேடு ரயில் நிலையத்தை யானை கள் முற்றுகையிட்டுள்ளன. ஆறு கள் மாசடைந்ததால் விலங்குக ளுக்கு நீர் கிடைக்காமல் அவை புலம் பெயரத் தொடங்கியுள்ளன.

நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதியில் பலாப்பழ சீசனை யொட்டி பலாப் பழங்களை உண்ண யானைகள் கூட்டம் இப்பகுதிகளில் முற்றுகையிடும். கடந்த சில நாட்களில் குட்டி உட்பட 5 யானைகள் மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதிகளில் உலா வருகின்றன. இந்த யானைகள் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு வராமல், வனத்துறையினர் கடந்த ஒரு மாதமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குட்டியை விட்டு பிரிந்ததால், தாய் யானை, நேற்று குன்னூர் மலை ரயில் பாதையில் முகாமிட்டு, மண்வாரி வீசியும், செடிகளை பிடிங்கி வீசியும் ஆக்ரோஷத்துடன் உலா வந்ததால் மலைப்பாதையில், ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

நெஸ்ட் அமைப்பின் அறங் காவலர் சிவதாஸ் கூறும்போது, ‘மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே செல்லும் ஆறுடன், காட்டாறுகள் இணைந்து பயணித்து பவானி ஆற்றை அடைகிறது. வனங்களில் உள்ள விலங்குகளுக்கு இந்த ஆறுகள் தான் நீராதாரமாக விளங்குகின்றன.

ஆனால், துரதிஷ்டவசமாக குன்னூர் நகரில் சேறும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலக்கிறது. கழிவுகளின் சங்கமமாக இந்த ஆறு மாறியுள்ளதால், யானைகள் இந்த நீரை பருகுவதில்லை. இதனால் தூய நீரை தேடும் யானைகள், ரன்னிமேடு ரயில் நிலையத்துக்கு வருகின்றன. அங்கே தூய நீர் தேங்கியிருக்கும் குட்டையை முற்றுகையிடுகின்றன’ என்றார்.

தண்ணீருக்காக கடந்த 3 நாட் களாக ரன்னிமேட்டில் முகாமிட் டுள்ள யானைகளை பட்டாசு வெடித்து துரத்த வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். அப்போது, அவர்களை யானைகள் துரத்தியதால் வனத்துறையினர் முயற்சி வீணானது.

Monday, 13 June 2016

VRDE (DRDO), Ahmednagar



Total No. of Posts: 03

Name of the Post: Junior Research Fellow

Age Limit: Candidates age should be maximum 28 years as on last date of receipt of applications. Age relaxation is applicable for SC/ ST/ OBC/ PH candidates as per rules.

Educational Qualification: Candidates should possess Graduation Degree in professional course (BE/ B.Tech) in the field of Electronics & Communication/ Mechanical/ Electrical with NET/ GATE qualified.

Selection Process: Candidates will be selected based on interview.

Application Fee: Candidates should pay Rs. 10/- by Bank Draft drawn in favour of Director, IRDE, Dehradun. Fee exempted for SC/ ST & OBC candidates.

How to Apply: Eligible candidates may send their typed application with complete bio-data with affixed passport size photograph on the right corner of the application, Bank Draft should reach the Director, Instruments Research & Development Establishment, Rajpur Road, Dehra Dun – 248008 within 21 days from the date of advertisement.

Important Dates:
Date of Advertisement: 04-06-2016 to 10-06-2016
Last Date for Receipt of Applications: Within 21 days from the date of advertisement.

காவல் நிலையம் போகாமலேயே புகார் தரலாம்!

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள பெண் பத்திரிகையாளார்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு கடந்த ஜூன் 7-ம் தேதி டில்லியில் நடந்தது. டில்லி விக்யான் பவனில் நடந்த இந்தப் பயிலரங்கில் காஷ்மீர் முதல் அந்தமான் வரையுள்ள பெண் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் மேம்பாட்டுக்காகவும் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களையும் விவரித்தார். அவற்றைச் செழுமைபடுத்தவும், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளைக் களையவும் பத்திரிகையாளர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

ஒரு குடையின் கீழ்
எந்தப் பாரபட்சமும் இல்லாமல் சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களும் ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள். பாதிப்புக்குள்ளாகிற அனைத்துப் பெண்களும் காவல் நிலையத்தின் துணையை நாடுவதில்லை. ஏதோவொரு தயக்கம் அவர்களைக் கட்டிப்போட்டுவிடுகிறது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘One stop centre’ திட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுசெய்யப்படும் என்று மேனகா காந்தி தெரிவித்தார்.

இது பெண்களுக்கான பிரத்யேக மையம். பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல், அமில வீச்சு, சூனியக்காரி என்று சொல்லி கொல்லப்படுவது இப்படி எந்த வகைப் பிரச்சினையாக இருந்தாலும் இந்த மையத்தை அணுகலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கப்படும் இந்த மையத்தில் பெண்களுக்கு மருத்துவம், சட்டம், உளவியல் ஆலோசனை என எந்த உதவி உடனடியாகத் தேவைப்படுகிறோ அதற்கான வழிவகைகள் செய்துதரப்படும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே செயல்பட்டுவரும் அமைப்புகளுடன் இது ஒருங்கிணைக்கப்படும்.
மீட்கப்படும் பெண்கள் இந்த மையத்திலேயே தற்காலிகமாகத் தங்கிக்கொள்ளலாம். நீண்ட நாள் தங்குமிடம் தேவைப்படுகிறவர்களாக இருந்தால் அவர்கள் அரசின் தற்காலிக தங்கும் விடுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

காவல் நிலையம், நீதிமன்றம் போன்றவற்றுக்கு வரத் தயங்கும் பெண்களுக்காக வீடியோ கான்ஃபரன்சிங் வசதியும் ஏற்பாடு செய்துதரப்படும். பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்தத் திட்டம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் என்று மேனகா காந்தி தெரிவித்தார். இன்று பலரும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் பெண்களின் பாதுகாப்புக்காகப் பிரத்யேக Panic button அமைப்பது குறித்து செல்போன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆபத்து நேரத்தில் இந்த பட்டனை அழுத்தினால் நாம் பதிவு செய்துவைத்திருக்கும் நபர்களுக்கும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் தகவல் சென்றுவிடும். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் அலாரம் போல இந்தத் தகவல் பரிமாறப்படுவதன் மூலம், சம்பந்தப்பட்ட நபரை மீட்பது எளிதாக இருக்கும். 2018-க்குள் அனைத்து செல்போன்களிலும் இந்த வசதி இருக்க வேண்டும் என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

விற்பது எளிது!
தவிர குழந்தகளின் நலனைக் கருத்தில் கொண்டு அங்கன்வாடிகளை முழுமையாகக் கண்காணிக்கும் பணியும் முடுக்கிவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிறுதொழில் மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடும் பெண்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை இலவசமாகச் சந்தைப்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும் http://mahilaehaat-rmk.gov.in/en/ இணையதளத்தை இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயன்படுத்திவருகிறார்கள். அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் மேனகா காந்தி தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் இந்தத் தளத்தில் பதிவுசெய்து தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலாம். பொருட்களை விற்பதற்காக அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மேனகா காந்தி குறிப்பிட்டார்.

Sunday, 12 June 2016

Fragrance & Flavour Development Centre (FFDC)

Total No. of Posts: 04

Name of the Post:
1. Research Associate: 01 Post
2. Lab Attendant: 01 Post
3. Un Skilled Labour: 02 Posts

Educational Qualification: Candidates should possess Ph.D in Chemistry/ M.Sc in Chemistry for Post No. 01, B.Sc in Chemistry for Post No. 02 & High School for Post No. 03 with relevant experience.

Selection Process: Candidates will be selected based on interview.

How to Apply: Eligible candidates may walk in interview with bio-data, photographs, original and one set of self attested photocopies of all educational certificates & mark-sheets on 20-06-2016 at 11:30 A.M.

Important Dates:
Date & Time of Interview: 20-06-2016 at 11:30 A.M
Venue: Fragrance & Flavour Development Centre (FFDC), Kannauj

முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்?

‘இன்றைக்கு யார் யாரெல்லாம் சாப்பிடலை? சாப்பிடாதவங்க எல்லாரும் கையைத் தூக்குங்க’- மருத்துவப் பணி காரணமாகக் கிராமப்புறப் பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். அநேகமாகச் சரிபாதிக் குழந்தைகள் கையைத் தூக்கிவிடுவார்கள். பள்ளிக்கு நேரமாச்சு, பஸ்ஸுக்கு லேட்டாயிருச்சு, பசிக்கலை, வீட்டில் சமையல் செய்யலை, பழைய சோறு சாப்பிடப் பிடிக்கலை என்பது போன்ற காரணங்களைச் சொல்வார்கள். ‘வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லை’, ‘பழைய சோற்றைச் சாப்பிடப் பிடிக்கவில்லை’ என்பதுதான் அதிகமானோர் சொல்லும் பதில். பொதுவாகக் கிராம ஊராட்சிப் பள்ளிகளின் நிலைமை இதுதான்.

தொடக்கப்பள்ளி சிறுகுழந்தைகள் காலையில் சாப்பிடாமல் வருவதைப் பார்ப்பது வேதனைதான். இதனால் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிச் செல்வேன். அதைப் பார்த்துவிட்டு ‘சார், இன்னைக்குக் கொடுத்துட்டுப் போய்டுவீங்க, நாளைக்கு யார் கொடுப்பாங்க?’ என்று ஒரு ஆசிரியர் கேட்டார்.

மதிய உணவுத் திட்டம்
ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால், பெரியவர்களுக்கே கண்ணைக் கட்டிக்கொண்டு வரும். எதையும் தெளிவாகப் பார்க்க முடியாது; தலை சுற்றும்; காது அடைக்கும்; எதிலும் கவனம் செலுத்த முடியாது. அப்படியென்றால் சிறு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும். பசி மயக்கம், வயது வித்தியாசம் பார்க்குமா என்ன?

பள்ளிகளில் கல்வி இலவசம் என்றிருந்த காலத்திலும் மாணவர்களின் குறைவான வருகைக்கு வறுமைதான் காரணம் என்பதையும் உணவு ஒரு முக்கியப் பிரச்சினை என்பதையும் அறிந்த அன்றைய முதல்வர் காமராஜர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்மூலம் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது. அவர்களுக்கு ஒரு வேளை உணவும் கிடைத்தது.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராஜர், ‘அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்துக்கு வருபவர்களுக்குச் சோறு போடுகிறோம்’ என்று கூறினார். அதற்கு நிதி ஒரு பிரச்சினை என்றால் இந்தத் திட்டத்துக்காக ஊர்வலமாகச் சென்று பிச்சை எடுக்கவும் அவர் தயாராக இருந்தார் என்பதை அறியும்போது, இந்தத் திட்டத்தில் அவருக்கு இருந்த அளப்பரிய ஆர்வத்தையும் மாணவர்களிடம் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அறிய முடிகிறது.

நகர்ப்புறக் குழந்தைகளின் பிரச்சினை

கிராமப்புறக் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காதது பிரச்சினை என்றால், நகர்ப்புறக் குழந்தைகளுக்கோ அதுவே தலைகீழ். ‘என் குழந்தை சரியாகச் சாப்பிடுவதேயில்லை, காய்கறி எதை வைத்தாலும் தொடுவதே கிடையாது’, ‘காலையில் ஒரு இட்லி அல்லது ஒரு தோசைதான் சாப்பிடுகிறார்கள். கேட்டால் ‘ஸ்கூலுக்கு நேரமாச்சு’ என்று சாக்குபோக்கு சொல்கிறார்கள்…

ஸ்கூலுக்குக் கொண்டுசென்ற மதிய உணவையும் அப்படியே கொண்டுவந்துவிடுகிறார்கள் அல்லது கொட்டிவிடுகிறார்கள்’ - இது நகர்ப்புறப் பெற்றோரின் ஆதங்கம்; வருத்தம். இதைத் தவிர உடம்பை ‘ஸ்லிம்மாக’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் காலை உணவைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

‘உனக்குப் பிடித்த காய்கறிகளின் பெயர்களைச் சொல்லு’ என்று குழந்தைகளிடம் கேட்டால், உருளைக்கிழங்கு, தக்காளி மிஞ்சிப்போனால் கத்திரிக்காய், முருங்கைக்காய்... அதற்கு மேல் சொல்லத் தெரிவதில்லை. லேஸ், குர்குரே, பீட்சா, நூடுல்ஸ், பர்கர் தெரிந்த அளவுக்கு நம் குழந்தைகளுக்குக் காய்கறிகள் தெரியவில்லை.

இதற்கு பெற்றோரான நாமும் ஒரு காரணம். குழந்தைகளை மார்க்கெட்டுக்கு, காய்கறிக் கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வகை வகையான பச்சை, மஞ்சள் காய்கறி, கீரைகளைக் காண்பித்து ஒவ்வொன்றின் சிறப்பையும் எடுத்துச் சொல்லி, நம் வாழ்வில் அவற்றின் பங்கை உணர்த்த வேண்டும். காய்கறிகளை விளைவித்துச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கு உழவர்கள் படும் பாடும் துயரங்களும் அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதற்குப் பிறகு காய்கறிகளைக் குழந்தைகள் ஒதுக்கமாட்டார்கள்.

காலை உணவு ஏன் முக்கியம்?
காலை உணவு மிக முக்கியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடல்நலனில் காலை உணவு முதன்மையானது, ராஜா சாப்பிடுவதைப்போல அது இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். சிறப்பான ஊட்டச்சத்து மிகுந்தும் நிறைவாகவும் அந்த உணவு இருக்க வேண்டும்.

இரவு உணவுக்குப் பின் சுமார் 10 மணி நேரம் கழித்து மறுநாள் காலை 8 மணிக்குத்தான் காலை உணவைச் சாப்பிடுகிறோம். இந்த நீண்ட விரதத்தைப் போக்குவதுதானே காலை உணவு (Break - fast) . இந்த உணவைத் தவிர்த்துவிட்டால், அடுத்து 1 மணிக்குத்தான் மதிய உணவைச் சாப்பிடுவோம். அப்போது முழுமையான உணவைச் சாப்பிடாத இடைவெளி 15 மணி நேரமாகிவிடும். இப்படி இருந்தால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, ரத்தச் சோகை போன்ற உடல்நலக் கேடுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதுபோன்ற இடையூறுகள் அடிக்கடி வாழ்க்கையில் இடைப்படும்.

பசியோடு இருக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. நினைவாற்றலுக்கு, மேம்பட்ட கவனிப்புத் திறனுக்கு, நன்றாகப் பேசுவதற்கு, தனித்திறமைக்கு, சிறந்த முறையில் கல்வி கற்பதற்கு, பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண்பதற்கு - காலை உணவு மிகவும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவைத் தவிர்த்தால், வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மாதவிடாய்க் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவதற்குச் சாத்தியம் உள்ளது. திருமணமான பிறகு பிரசவக் காலத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம், பிரசவமும் சிக்கலாகலாம்.

அனைவருக்கும் அவசியம்

காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் நாள் முழுக்கச் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட உதவுகிறது. நலமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, நீண்ட ஆயுள் ஆகியவற்றுக்குக் குழந்தைகளுக்குக் காலை உணவு அவசியம். இதையெல்லாம் உணர்ந்துகொண்டுதான் ‘வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்க வேண்டும்’ என்று காமராஜர் அன்று நினைத்தார்; செயல்படுத்தியும் காட்டினார்.

நலவாழ்வில் முக்கியப் பங்கை வகிக்கும் காலை உணவு, பள்ளி மாணவர்களின் உடல்நலனில் மட்டுமல்லாமல் அவர்களுடைய கல்வியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து, தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளியிலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கல்வித் தரத்தை உயர்த்தும் காலை உணவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.