Tuesday, 7 June 2016

HLL Lifecare Limited

Eligibility : MSc, M Phil / Phd, BE/B.Tech
Location : Thiruvananthapuram
Last Date : 15 Jun 2016
Hiring Process : Written-test, Face to Face Interview
Reserch Interns (POLYMER) /1 post HLL Corporate R & D Centre, Akkulam,Thiruvananthapuram

Qualification: Essential: B.Tech Polymer / M.Sc (Polymer)

Maximum Age:  28 Years as on 01/06/2016.
 
Stipend: Rs. 12,000, Rs. 13,000 and Rs. 15,000/- per month for the First Year, Second Year and Third
Year Respectively 

Project Assistant /1 Post Corporate Research & Development Centre, Akkulam, Thiruvananthapuram

Qualification: Essential:  M.Sc with First Class. Desirable: Experience in Documentation

Maximum Age:  28Years as on 01/06/2016.
 
Consolidated Pay: Rs.14,000/-per month

Junior Scientist  /1 Post  Corporate Research & Development Centre, Akkulam, Thiruvananthapuram

Qualification: Essential: Ph.D.in Chemistry
 
Desirable: Area of research-Polyelectrolyte synthesis and application.
 
Post Qualification Experience: Desirable: Experience in polyelectrolyte synthesis and application.

Maximum Age:  40Years as on 01/06/2016.
 
Consolidated Pay: Rs. 30,000/- per month


Junior Scientist /1 Post  Corporate Research & Development Centre, Akkulam, Thiruvananthapuram

Qualification: Essential: Ph.D. (Organic Chemistry)
 
Desirable: Post Qualification Experience:1-2years of Post Ph.D experience in organic synthesis specially in process development for organic molecules.
 
Maximum Age:  40Years as on 01/06/2016.
 
Consolidated Pay: Rs. 30,000-, 40,000/- per month

How to apply

Apply Online or send latest CV to hrvrdc@lifecarehll.com on or before 15/6/2016.

Monday, 6 June 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 34: இன்றைய அவசர, அவசியத் தேவை

எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் இன்னமும் மனநலனைப் பேணுவதில் நாம் மட்டுமல்ல, நமது ஆட்சியாளர்களும் பின்தங்கியே உள்ளனர். ‘அரசுப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பெருமளவு குறைத்துவிடுவோம்’ என்று தேர்தல் அறிக்கை வெளியிடும் அளவுக்குதான், மனநல பாதிப்புகளைக் குறித்த புரிதல் நம்முடைய அரசியல் தலைவர்களுக்கே உள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களில் இந்தத் தொடரில் பேசப்பட்ட விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகப் பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் பல்வேறு வழிகளில் என்னிடம் தெரிவித்துவந்தனர். படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சிதான் மனதில் நன்றாக பதியும். எனவே, இந்த அத்தியாயத்தில் சில முக்கியமான விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
பெற்றோர் கவனத்துக்கு…
# வளர்இளம் பருவத்தில் எல்லாருக்கும் ஏற்படும் சாதாரண மனரீதியான மாற்றங்களைக் குறித்து பயப்பட வேண்டாம். இவற்றை ஆலோசனைகள் மூலம் பெரும்பாலும் சரிசெய்துவிடலாம்.
# குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கப்படும் விதமே, வளர்இளம் பருவத்தின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். பெற்றோர் கற்றுக்கொடுக்கும் காரியங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்தான் குழந்தைகள்.
# அசாதாரண மாற்றங்கள் தெரியும்பட்சத்தில் மனநல மருத்துவரை அணுகத் தயங்காதீர்கள். உடல் நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது போன்றதுதான், மனநல மருத்துவரை நாடுவதும். அறிவியல்பூர்வமாக செய்யப்படும் சிகிச்சைகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.
# சரியான நேரத்தில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல்தான் நிறைய வளர்இளம் பருவத்தினர் பாதை மாறுகின்றனர். தற்போது முதுகலை மனநல மருத்துவம் (MD) படித்து முடித்த பின், குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் மனநலத்துக்கு மட்டுமே தனி பட்டமேற்படிப்பு (DM) பிரிவுகள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு வளர்இளம் பருவத்தினரின் மனநலம் முக்கியமான ஒன்றாகத் தற்போது கருதப்படுகிறது.
# மனநோய்கள் ஏற்படும்பட்சத்தில் மனம் உடைந்துவிடத் தேவையில்லை. தற்போது வேகமாக வளர்ந்துவரும் மனநல மருத்துவத் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் மனநல சிகிச்சையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் அளவில் உள்ளன.
# இந்தக் குழப்பத்தில் ‘பிராய்லர் பள்ளி’களின் கவர்ச்சியான விளம்பரங்களுக்கு மயங்கிக் குழந்தைகளை பலிகடாக்களாக்கி விடாதீர்கள். நூற்றுக்கு முப்பது பேர் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த தாகப் பல பள்ளிகள் விளம்பரம் செய்வது ஊரறிந்த செய்தி. ஆனால், அந்தப் பள்ளிகள் நடத்தப்படும் முறை காரணமாக, அதே அளவு மாணவர்கள் மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது மனநல மருத்துவர்கள் மட்டுமே அறிந்த செய்தி.
ஆசிரியர்களின் கவனத்துக்கு…
# வளர்இளம் பருவத்தில் மாணவர்கள் பெரும்பாலான நேரம் பள்ளியில் செலவிடுவதால் வளர்இளம் பருவத்தினரின் நலனில் ஆசிரியர்களே முக்கியப் பங்கு வகிக்க முடியும்.
# முழுமையான கட்டுப்பாட்டை விரும்பாத இந்த வயதில் “ஆடுற மாட்டை ஆடிக் கறப்பது” போன்ற வித்தைகளைத் தெரிந்து வைத்திருந்தால், மாணவர்களைச் சிறப்பாகக் கண்காணிக்க முடியும்.
# போதைப்பொருள் மற்றும் மொபைல் போன், இன்டர்நெட் பயன்பாடுகளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அடிக்கடி ஏற்படுத்துவது, இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்று.
# பள்ளியில் அசாதாரண மாற்றங்கள் தெரியும்பட்சத்தில் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்துவது மட்டுமல்லாமல், மனநல மருத்துவரை ஆலோசிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் தயங்க வேண்டாம்.
வளர்இளம் பருவத்தினரின் கவனத்துக்கு…
# எதற்குமே `ரிஸ்க்’ எடுத்து இறங்கிப் பார்க்கத் தோன்றும் இந்த வயதில், போதை மற்றும் செக்ஸ் குறித்த விஷயங்களில் `ரிஸ்க்’ எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் சீரமைக்க முடியாத பல மோசமான பின்விளைவுகளை இவை ஏற்படுத்திவிடும்.
# முடிந்தவரை பெற்றோரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களால் தீர்க்க முடியாத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்கள் சார்ந்து மனநல மருத்துவரின் உதவியை நாடுவதன் அவசியத்தை பெற்றோரிடம் எடுத்துச்சொல்லுங்கள்.
# மனநல ஆலோசனைக்கு அழைத்து வரப்படும் இளசுகள், “என்னை இங்கு அழைத்து வந்துவிட்டீர்களே, நான் என்ன பைத்தியமா?” என்று பெற்றோருடன் வாக்குவாதம் செய்துகொண்டே கிளினிக் உள்ளே நுழைவதை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். மனநல மருத்துவரைப் பார்க்க, மனநோய் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. மனநல ஆலோசனை உங்கள் வாழ்க்கைக்கு அல்லது பிரச்சினைகளுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கக்கூடும்.
# வளர்இளம் பருவத்தில் பெரிய சாதனைகளாகத் தோன்றும் போதை, காதல், ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல் கேளாமை போன்றவை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போதுதான், “இத்தனை கோமாளித்தனமாகவா நாம் நடந்துகொண்டோம்?” என்று புரியவரும். காலம் கடந்து சிந்தித்துப் பார்க்கும்படி இருந்தாலும், உங்கள் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வது கடினம்.
# மொபைல் போன், பைக் போன்ற விஷயங்களை பெற்றோரின் முடிவுக்கு விட்டுவிடுங்கள். அவர்களை மிரட்டிப் பெற்றுக்கொள்வதால் அவை கையில் கிடைப்பது மட்டும்தான் லாபமே தவிர, வாழ்க்கை மற்றும் படிப்பில் பல நஷ்டங்கள் ஏற்படலாம்.
மனநல மருத்துவத்தை ‘பைத்தியம்’என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட வேண்டாம். அதற்கு மேற்பட்ட ஏராளமான, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் அடங்கிய துறைதான் மனநல மருத்துவம். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதுபோல நல்ல உடல்நலம் மட்டுமல்லாமல், மனநலமும் இருந்தால் மட்டுமே இளைய சமுதாயம் சாதிக்க முடியும். நல்ல வகையில் மனநலனைப் பெற்று பலரும் இன்று சாதித்து வருகிறார்கள், நாளையும் சாதிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வளர்இளம் பருவத்தில் பெரிய சாதனைகளாகத் தோன்றும் போதை, காதல், ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல் கேளாமை போன்றவை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போதுதான், “இத்தனை கோமாளித்தனமாகவா நாம் நடந்துகொண்டோம்?” என்று புரியவரும்.

Western Railway

Total No of Posts: 557

Name of the Posts:
i. SC: 78 Posts
ii. ST: 38 Posts
iii. OBC: 145 posts
iv. UR: 296 Posts

Electrical EMU Crashed: 185 Posts
1. Fitter: 09 Posts
2. Turner: 09 Posts
3. Mechanist: 03 Posts
4. Welder (Gas & Electronics): 09 Posts
5. Mortor Vehicle Body Builder: 03 Posts
6. Electrician: 40 Posts
7. Wire man: 06 Posts
8. Carpenter: 09 Posts
9. Instrument Mechanic: 15 Posts
10. Pipe Fitter: 03 Posts
11. Electronics Mech: 50 Posts
12. Programming & system Admn Asstt (PASSA): 14 Posts
13. Mech Industrial Electronic: 09 Posts
14. Power Electronic: 06 Posts

Elect TRS/ VALSAD: 69 Posts
15. Fitter: 07 Posts
16. Turner: 03 Posts
17. Mechanist: 02 Posts
18. Welder (Gas & Electronics): 10 Posts
19. Electrician: 23 Posts
20. Winder Armature: 07 Posts
21. Carpenter: 01 Post
22. Mechanist Machine Tool Maint: 04 Posts
23. Instrument Mechanic: 03 Posts
24. Mechanic (Motor Viechle): 01 Post
25. Mechanic (Diesal): 01 Post
26. Draughts man (Mechanical): 01 post
27. Electronic Mechanic: 04 Posts
28. Painter (General): 02 Posts

Electrical Coaching Power: 160 Posts
29. Electronics Mechanic: 13 Posts
30. Electrician: 50 Posts
31. Wire man: 25 Posts
32. Refrigeration & Air Conditioned Mehanic: 50 Posts
33. Mechanic (Diesel): 22 Posts

Mechanical: 143 Posts
34. Fitter (C & W): 102 Posts
35. Turner: 01 Posts
36. Welder: 02 Posts
37. Carpenter: 11 Posts
38. Upholsterer (Trimmer): 04 Posts
39. Painter: 03 Posts
40. Motor Mechanic: 03 Posts
41. Diesel Fitter: 17 Posts

Age Limit: Candidate should have completed 15 years of age & not have completed 24 years of age as on 12-04-2016. Upper age relaxation of 05 years for SC/ ST, 03 years for OBC & Other candidates is applicable as per rules.

Educational Qualification: Candidates should possess average of matriculation (with minimum 50 % aggregate marks) plus ITI marks.

Sunday, 5 June 2016

உலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண்மைகள்



நோய்க்குத் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் நோய்க்குத் தாய் உணவுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் சித்த மருத்துவ முறையில் நோயைத் தீர்க்கப் பத்திய முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதனால்தான் சிறிய மருந்து முதல் கற்ப மருந்துவரை கொடுத்தாலும் பத்திய உணவு முறையைச் சொல்லச் சித்த மருத்துவர்கள் தவறுவது இல்லை.
தேடி வரும் உலகம்
உணவு முறை, குறிப்பாகத் தமிழரின் உணவு முறையில் தற்கால அறிவியல் ஆதாரங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஹாலிவுட், இங்கிலாந்து, பாரிஸ் நகர வீதிகளில் உலக மக்களாலும் விரும்பப்படும் உணவாகத் தமிழரின் காலைச் சிற்றுண்டியான இட்லி மாறிவருவது, நம் உணவை உலகம் ஏற்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்துகிறது.
சமீபத்தில் இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி, தோசை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இட்லி மீது நூற்றுக்கணக்கான ஆய்வுகளை மேற்கொண்டு, நோயில்லாமல் வாழ மிகச் சிறந்த உணவு என்ற பரிந்துரையை அறிவியலார்கள் தெரிவித்துள்ளதுதான். எந்தத் தட்பவெப்ப நிலை, மக்களின் நல்வாழ்வுக்கும் ஏற்றது இட்லி.
சமநிலை உணவு
உணவு அறிவியல் (Food Science) முறைப்படி இட்லி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இட்லி செய்யத் தேவையான உணவுப் பொருட்கள்: புழுங்கல் அரிசி, உளுந்து. இந்த இரண்டையும் உட்கொள்ள வேண்டியதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன.
பயறு வகையான உளுந்தும், தானிய வகையான அரிசியும் இணைக்கப்பட்டதால் புரதச் சமநிலையும் தரமான புரதமும் கிடைக்கின்றன. பயறு வகைப் புரதத்தில் லைசின் எனும் அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகைப் புரதத்தில் மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலம் அதிகமாகவும் உள்ளன.
அரிசியும், பாசிப் பருப்பும் இணைந்த வெண்பொங்கல் (சோறு) + சாம்பார் (பருப்பு சேர்த்தது) உடன் இணைந்து புரதச் சமநிலையைத் தருவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பழங்கால உணவில் பொதிந்துள்ள சிந்தனையை அறிந்துகொள்ள இந்த ஆய்வுகள் உறுதுணையாக உள்ளன. இட்லியில் சேர்க்கப்படும் பொருட்களைப் பற்றி பார்ப்போம்:
புழுங்கல் அரிசி மகத்துவம்
தண்ணீரில் ஊற வைத்த நெல்லை அவித்துத் தவிடு, உமி நீக்கிப் புழுங்கல் அரிசி தயாரிக்கப்படுகிறது. அவிக்கப்படுவதற்கான காரணம் என்ன? நெல்லை நீருடன் சேர்த்து அவிக்கும்போது உயிர்ச்சத்து (வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் தயமின்) போன்றவை அரிசியின் மேல் பகுதியிலிருந்து உட்பகுதிக்குச் சென்றுவிடுவதால் அரிசியைத் தீட்டும்போது வைட்டமின் இழப்பு ஏற்படுவதில்லை.
நெல் மணியில் உள்ளவை ஸ்டார்ச்சான அமைலோஸ், அமைலோபெக்டின் (Amylose, Amlopectin) குளுகோஸ் பொருட்கள். இவை அதிகம் உள்ள அரிசி ரகங்கள் சமைத்த உடன் குழையாமலும் பிசுபிசுப்பு இல்லாமலும் இருப்பதால் தோசைக்கு ஏற்றவை.
பழுப்பு நிறம் ஏன்?
அரிசியில் உள்ள சர்க்கரைச் சத்தும் அமினோ அமிலமும் வேக வைக்கும்போது ஒன்றோடு ஒன்று இணைந்து பழுப்பு நிற வேதிமம் உண்டாகிறது. இதனால் புழுங்கல் அரிசி பழுப்பு நிறமாக உள்ளது. இவ்வினையை மைலார்டு வினை (Mylord Reaction) என்பார்கள். சமைத்ததும் பழுப்பு நிற வேதிமம் சூடான நீரில் ஆவியாகிப் போய்விடுவதால், இது வெண்மை நிறத்தை அடைகிறது.
ஊற வைக்கும் அறிவியல்
உளுத்தம் பருப்பில் 60 சதவீதம் மாவுச்சத்து உள்ளது. இந்த மாவுச்சத்தில் ஒலிகோ சாக்கரைடுகள் உள்ளன. இந்த ஒலிகோ சாக்கரைடுகளை நமது குடலால் உறிஞ்ச முடிவதில்லை. இந்தச் சத்துப் பொருளை ஜீரணிக்கும் காலக்டோஸ் என்ற நொதியில்லாத காரணத்தால், சிறு குடலில் ஜீரணிக்காமல் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிர்கள் ஒலிகோ சாக்கரைடுகளைச் சிதைத்து அதிக அளவு கரியமில வாயு, ஹைட்ரஜன் வாயு, சிறிதளவு மீத்தேன் வாயுவாக மாற்றி, வாயுத் தொல்லையை உண்டாக்குகிறது. உளுந்தை நீரில் ஊற வைக்கும்போது, தீமை பயக்கும் இந்த ஒலிகோ சாக்கரைடு நீராற் பகுத்தல் வினை மூலம் நீக்கப்பட்டு விடுவதைக் கவனிக்க வேண்டும்.
மாவு ஆக்கும் முறை
அரிசியையும் உளுந்தையும் அரைத்து மாவாக்குவதன் மூலம் உணவுப் பொருட்கள் நுண்மையாக்கப்படுகின்றன. இட்லி மாவில் சிறிதளவு உப்பு சேர்க்கப்படுகிறது. உணவுப் பண்டத்தின் அமில-காரத்தன்மையை (PH value Normal) இயல்பாக வைக்கவே இது சேர்க்கப்படுகிறது. கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இட்லியில் உளுந்தின் அளவைக் குறைத்து, வியாபார நோக்கத்துடன் சமையல் சோடா உப்பைச் சேர்க்கின்றனர். இதனால் இட்லி காரத்தன்மையை அடைந்து, அதில் உள்ள தயமின் என்ற வைட்டமின் அழிந்துவிடுவதால், உடலுக்குச் சத்து கிடைக்காமல் போய்விடுகிறது.
சத்து இழப்பு தவிர்ப்பு
நீராவியில் வேக வைப்பதால் இட்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சத்துப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. தயமின் போன்றவை வெப்பத்தால் ஆவியாகக் கூடியவை. அதேநேரம் உணவு நீராவியால் வெப்பப்படுத்தும்போது, பாதிக்கப்படுவதில்லை.
உளுந்தில் உள்ள டிரிப்சின் நொதி தடுப்பான்கள், புரதத்தைச் செரிமானம் செய்து நமது குடல் உட்கிரகிப்பதைத் தடை செய்யக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. நீராவியில் வேக வைக்கும்போது, இவை செயல் இழந்துவிடுகின்றன.
உளுந்தை நீராவியில் வேக வைப்பதன் மூலம், உளுந்தில் உள்ள சத்தைச் சேதப்படுத்தும் காரணிகள் (Anti nutritive factors) அழிக்கப்படுவதால் கனிமச் சத்துகள் உடலுக்குக் கிடைப்பது அதிகரிக்கிறது.
விழித்துக் கொள்வோமா?
உளுந்தில் உள்ள ‘அரோபினோ காலக்டோன்’ என்ற சர்க்கரைப் பொருள் நொதிக்கப்பட்டிருப்பதே, இட்லி மிருதுவாக இருக்கக் காரணமாகிறது. இட்லியில் உயிரியல் மற்றும் புரத மதிப்பு (Biological value & Protein efficiency ratio) அதிக அளவிலும், அதேநேரம் புரதச் சமநிலையுடனும் உள்ளதாகப் பூர்வாங்க ஆய்வுகள் தெளிவாக விளக்குகின்றன.
நம்மவர்கள் நம் உணவை விட்டு விலகி வரும் இந்தக் காலத்தில், அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உலகம் நம் உணவைத் தேடிவர ஆரம்பித்திருக்கிறது, இதற்கு மேல் விழித்துக்கொள்வது அவரவர் பொறுப்பு.
தோல் உளுந்து அதிக ஊட்டம் முதல் உணவு
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது தோலுடன் உள்ள கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. திருநெல்வேலி மாவட்டத்தில் முழு உளுந்து தோசை வீடுதோறும் நடைமுறையில் உண்டு. உளுந்து தோலில்தான் leuconostec mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது.
இந்தப் பாக்டீரியாதான் இட்லி மாவு புளிப்பதற்குக் காரணம். அத்துடன் உளுந்துத் தோலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சம விகிதத்தில் உள்ளன. தோல் நீக்கம் செய்யப்பட்ட உளுந்தைப் பயன்படுத்தும்போது, மாவைப் புளிக்க வைக்க வெந்தயம் சேர்க்கிறார்கள். இருந்தபோதும், வெள்ளை நிறத்துக்கு மயங்கிப் போகாமல் தோல் உளுந்துடன் இட்லி, தோசையைச் சாப்பிடுவது உடலுக்குக் கூடுதல் வலுவூட்டும்

National Brain Research Centre, Manesar

Name of the Post: R&D Engineer-1 (Project)

Educational Qualification: Candidates should posses M.Tech (Electrical /Electronics/ Mechanical) or Ph.D. in Physics with 60% marks.

Selection Process: Candidates will be selected based on interview.

How to Apply: Eligible candidates can apply in the prescribed application format along with bio data, self- attested copies of certificates in support of their qualifications, experience, Statement of Purpose (SOP) of summarizing your interest in the research area of the laboratory where you are seeking the position to the Registrar, National Brain Research Centre, Nainwal Mode, Manesar – 122 051, Distt- Gurgaon (Haryana) on or before 17-06-2016.

Last Date for Submission of Application: 17-06-2016