Pages

Wednesday, 17 August 2016

விமான நிறுவனத்தில் 280 பொறியாளர் பணி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான ‘ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.)’  நிறுவனத்தில் கிராஜூவேட் என்ஜினீயர் டிரெயினி– ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் (ஏ.எம்.இ.) பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
வயது வரம்பு: 01.07.2016 தேதியின்படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல், ஏரோனாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகசேன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் கேட் தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினர் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தியான விண்ணப்ப படிவத்தின் நகல், கொல்கத்தா ஏ.ஐ.இ.எஸ்.எஸ்.எல். நிறுவன முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2016
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 30.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment